Tuesday 31 December 2019

நேற்று இல்லாத மாற்றம்




நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணமெல்லாம் மண்ணை தீண்டும் வரை
படகின் பயணமெல்லாம் நதியை தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை
காற்று வழிபோவதை நாற்று சொல்கிறது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது
-வைரமுத்து...(புதியமுகம் படம் பாட்டு...
ரொம்பவும் மெல்லிசான குரல்..அவ்ளோ இதம் இந்த பாட்டுல...
யெஸ்....2019...
அவ்ளோதான்...
இன்னைக்கு என்னா பண்ணாலுமே அதுதான் இந்த வருஷத்தோட கடைசி...
அதுபோலதான் இதும்...
.இந்த வருஷத்தோட கடைசி எழுத்துக்கள்...
அப்டி என்ன நேற்று இல்லாத மாற்றம்...
நிறைய உறவுகளோட பிரிவு...
நிறைய உறவுகளோட இணக்கம்...
எல்லாத்தையுமே கடந்து செல்லுற மேகம்னு(அதான் அந்த passing clouds) நம்ம வேகமா நடந்து போய்ட முடியாது ..
சில மேகங்கள் மழைப்பொழிந்தே தீரும்...நாம் நனைந்துதான் ஆக வேண்டியதாய் இருக்கும்...(குடை புடிச்சுக்கலாமேங்கிற மொக்க காமெடிலாம் மனசுல கூட நினைச்சுடாந்திங்க)...
அவ்வாறான இனிப்பும் கசப்புமாய்தான்...
காலேஜ் final year....இந்தா.. இன்னும் 5 மாசந்தான் ..இதும் முடிஞ்சுடும்...(அப்றம் என்ன ?..நாய் பொழப்புதான்)...
இது எதுக்குனா,நா சொகுசா வாழ்ந்த கடைசி வருஷம் இதான்..
இந்தக்கல்லூரி- வாழ்க்கையோட புது புது கோணங்கள அள்ளி கைல தந்து இந்த வாழ்ந்து பாருன்னு நீட்டுது...
(அனுபவத்த கேக்குறது ஒரு விதம்னா..அனுபவிக்கிறது தனி விதம்..)
ஆயிரம் சொன்னாலும் 24 வயசுவரை ஒரு சின்ன புள்ள உணர்வுதாம் எல்லாருக்குள்ளவும் இருக்கும்ம்...(அடுத்த வருஷம் 25 வயசுல...😞)இதுவும் போட்சா...
போன் பயன்படுத்தாத 100 நாள்-இந்த வருஷத்தோட சாதனை...(இதலாம் ஒரு பொழப்பானு துப்பாதிங்க...)..
இந்த முகப்புத்தகம் வாட்சப் போன்ற எல்லா சமூக வலைத்தளங்களும் போர் அடித்து ,மண்டையில் அடித்து வெளியேறின வருடம் இதுதான்...(நாய் எப்டி மழுப்புது பாரு...அதானே.....
😂)
கூட படித்த முக்கால்வாசி நண்பர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த போதிலும்...(அதுக்குலாம் நீ சரிப்பட்டு வர மாட்ட என்ற நோக்கிலே வாழ்க்கை நகர்கிறது...)
புது  மனிதர்கள்...(Dr.Sundarrajan , parvin akka(சூப்பரா கறிவடை செய்வாங்க),ஊட்டிக்காரரு,நர்ஸ் பானு ,dr.shanthi mam,melapalayam hospital head அவரு,வீரமங்கை,புது குழந்தைங்க..இன்னும்)..

மருத்
ஓ.பி ஐ.பிலாம் ஓரளவுக்கு fun ஆ தான் போச்சு...
க்ளாஸ்ல சண்டக்கோழியாவே வருஷம் போய்டுச்சு...
பிக்பாஸ்...100 நாள்...கவினே முகேனு சாண்டி ....அது வேற லெவல் fun...
(It stands ல)...
ஆக்சுவலி..
என்னடா கல்யாணம் குழந்தைங்கனு தோணும்...
எல்லாருமே எதோ ரெண்டு பேரோட காம இருப்புக்குதானே பொறந்தவங்கனு தோணும்...
ஆனா குழந்தை பெத்துக்கிட்டு அதுக்காக வாழ்ந்துக்கிட்டு ,அவங்க காட்ற அந்த பாசம்...உனக்காக நானும் நமக்காக அவங்களும்னு ஒரு குடும்ப அமைப்புலாம் சூப்பர்ல தோணது அந்த லாஸ்லியா புள்ளனால தான்....
எதுக்கு இதலாம்னு ஒவ்வொருத்தரும் இப்டி யோசிச்சா குடும்பங்கிற ஒரு அமைப்பே இல்லாம போய்டும்ல...
அன்புக்காகதானே சார் இந்த உலகம்...
வேறன்ன...அதான் எல்லாம்...
இந்த வருடத்தோட ஓரளவுக்கான மாற்றங்கள் இதான்....
அடுத்து என்ன புது வருச காலண்டர திருப்பி,
அரசு விடுமுறைகளை எண்ண வேண்டியதுதான்....
..
அன்புடன் அனுப்பி வைக்கிறோம் -2019..
ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறோம்..-2020




..

Saturday 21 December 2019

நினைவுகள்

உன் நினைவுகள்
இன்னும்
நெஞ்சில்
பத்திரம்தான்...

கனவுகளை
நிஜமென்று
நம்பி
நடுராத்திரியில்
உன்னை தேடுகிறேன்...

உனக்கான
தொலைவுகளை
விரல் எட்டில்
அளந்துக்
கொண்டிருக்கிறேன்...

கண்கள்
  பொய்யென்று
கனவுகள் 
   மெய்யென்று
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்...


Wednesday 26 June 2019

பிரியாணி கேக்🙈

Its not about bday girl...
It's  about on the bday celebrations...

Yes...
காட்சி 1:

இடம்:பெண்கள் விடுதி..எங்க ரூம்...

நேரம்:குத்து மதிப்பா  நைட் பதினொன்னே முக்கால் இருக்கும்..

பங்கேற்பாளர்கள்: ப்ரியா,ப்ரஸ்ஸு,சுஷ்..இன்னொரு ப்ரியா...

சுஷ்:அக்கா ....தீப்பெட்டி இருக்கா....?

ப்ரியா:  (ஓ.கே..இன்னைக்கு பொறந்தா நாள் கொண்டாட போறாங்க....கேக் ரெடின்னு..யோசிச்சுக்கிட்டே)...எதுக்குடி தீப்பெட்டி???🔎🔍

சுஷ்: மெழுகுவர்த்தி கொளுத்தக்கா....🕯

பின்வருவன மைட் வாய்ஸ்...
அடிப்பாவி...ஒரு பிறந்தநாளுக்கு கேக் வெட்ட கூப்ட மாட்டிக்கிறாளுங்க....😁😁

ப்ரசன்யா:இதுக்கு நீ தூக்கு மாட்டி தொங்கிருடி ப்ரியா..😫

இன்னொரு ப்ரியா..:அக்கா தெய்வாக்கு கேக் வெட்றோம்..வந்துருங்க...😜

(ஹப்பாடா)😜😜😜😜




இன்னும் சில நிமிடங்களில்...

நா:சரி வாடி ப்ரசன் யா...போலாம்..
ப்ரசன் யா:எவ்ளோ பட்டாலும் நமக்குலாம் வெக்கமே இருக்காதுல...வா..போலாம்...
😌😌😌😌
காட்சி 2:

பங்கேற்பாளர்கள்: பிறந்தநாள் பொண்ணு-தெய்வா...அவங்க ரூம் புள்ளைங்க...ப்ரியா...பிரசன்யா...🙄🙄



Cream cake இல்ல...அது...fruits லாம் வச்சு cake   மாதிரி ரெடி பண்ணிருந்தாங்க...🤓🤓

(500ரூபாய்க்கு கேக் வாங்குனமா..வெட்டுனமானு இல்லாம...இதலாம் ஒரு வேலையா....)

இல்ல...நாம ஒருத்தங்களுக்காக எவ்ளோ மெனக்கெடுங்குறோம்ங்கிறதுல இருக்கு அந்த பாசம்..😍😍😍😋

மெனக்கெட்டு நல்லா அழகா பண்ணிருந்தாளுங்க அந்த புள்ளைங்க....😘

மூஞ்சில க்ரிம் பூசிக்கிறத compensate பண்ண கலர் பொடி வச்சுருந்தாளுங்க...😻😻😻

அப்டியே....எல்லாருக்கும் சாக்லேட் கொடுன்னு கேரட் slice பண்ணி வச்சுருந்தாளுங்க.. 🙈

அவளும் எல்லாருக்கும் ஊட்டி விட்டுக்கிட்டே ,என்ன தாண்டி உள்ள புள்ளைக்கு ஊட்ட போனா...🙊

ப்ரியா:ஏய் நானும் இருக்கேண்டி.....🙊🙊

தெய்வா:  க்கா....நீங்க போட்டோ எடுக்கதானே வந்திங்க..  🙉🙉🙉

ப்ரியா:  அடிப்பாவவிகளா...அவ என்னடானா மெழுகுவர்த்தி கொளுத்த தீப்பெட்டி வேணுங்கிறா...நீ என்னடானா போட்டோ எடுத்து குடுக்க👶 வந்துருக்கேங்குற....என்னடி நினைச்சிட்டு இருக்கிங்க....🐣🐦📱📱📸📷

சரி சரி விடுங்க....அந்த பழத்த எடுங்க....

கலகல...கல கல....

பரிசுகள் பகிர்ந்துகிட்டதும்,கலர் தண்ணிலாம் ஊத்தி அந்த புள்ளைய அலங்கார படுத்துனதும் கொண்டாட்டம் முடிஞ்சிரும் அப்டிதானே....
ஆனா இல்ல....

அந்த இடத்தலாம் க்ளீன் பண்ணி விட்டுட்டுதான் தூங்குனாளுங்க....(ஆயா வேல பார்த்ததுக்கு இவ்ளோ பில்டப்பா....)


அந்த புள்ளைங்க....
Nice girls...😍😍😍😍
தெய்வா...u had nice frnds டி பாப்பா......


(அக்கா..விடுங்க...உங்களுக்கு பிரியாணி கேக் வெட்டிடலாம்...😂😂😂😂)...














Tuesday 11 June 2019

பாட்டி வடை சுட்ட கதை🐶

இடம்:மொட்டை மாடி🌃🌃🌌

நேரம்:நிலா வானத்துத்துல தெரியிற நேரம்..

பங்கேற்பாளர்கள்: ஒரு 90's அக்கா...நிறைய குட்டி பசங்க...பக்கத்து வீட்டு பாட்டி:
வான்வழி மேகங்கள் எல்லாம் மெல்ல நடை பயிலுகின்றன என்று ,முகில் நடுவே நிலவை காட்டி பாட்டி வடை சுட்டக் கதையை சொல்லி முடிக்கிறாள்....

குட்டி 1:
ஆமா.....பாட்டி நிலவில் சுட்ட வடைகள் எல்லாம் மிதக்கின்றன...

குட்டி 2:
பாட்டி சிலிண்டர் தீந்து போயிடுச்சுனா என்ன பண்ணுவாங்க...
எண்ணெய் தீந்துருச்சுனா....?...


பக்கத்து வீட்டு பாட்டி:

பாட்டி சுட்ட வடை நிறைய எண்ணெய் குடிச்சுருக்குமோ...?...

குட்டி 3:
அங்கதான் gravity கம்மில அப்டினா பாட்டி astronauts suite போட்ருந்தாங்களா...?..
பறந்துக்கிட்டே சுட்டாங்களா???..


90's அக்கா:.
நானாலாம் பாட்டி சுட்டது உளுந்தவடையா?இல்ல பருப்புவடையானு மட்டுந்தானேடா யோசிச்சேன்....

(கதை உணர்த்தும் நீதி: இனி இந்த கத வேலைக்காகாது...)

Thursday 30 May 2019

வீட்டு சோறு..💝👯

ஒருத்தருக்கு போய்டு என்னத்த சமைக்கனு சமைக்காமலே விட்ருவாங்க நிறைய தனிவாசிங்க...

வீட்ல எல்லாரும் இருந்தா அவங்க எல்லாருக்குமே ஒரளவுக்கு புடிக்கிற மாதிரி ,பொதுவாதான் சமைக்க முடியும்...

அண்ணனுக்கு வெண்டைக்காய் புடிக்காது.தம்பிக்கு சாம்பார் புடிக்காது,அம்மாட்சிக்கு உருளைக்கிழங்கு ஆகாது..
காரம் கொஞ்சம் ஜாஸ்தியா..அம்மாக்கு பெருங்காயம் ஆகாது...அப்பாக்கு எண்ணெய் கம்மியா ஊத்தி சமைக்கனும்...இப்டி அப்டி பெரிய லிஸ்டே வைச்சுருப்பாங்க...(போடுறத திண்ணுனும்,கிடைக்கிறத திண்ணுக்கனுங்கிறதுலாம் வேற கதை...)


எனக்கு-
கொஞ்சமா சோறு....
நிறைய காய்கறிங்க....
கீரை பொறியல்-ல தேங்கா வேணா...
உருளைக்கிழங்குனா நிறைய இஷ்டம்..
கருவாடு குழம்பா இல்லாம கொஞ்சம் பிறட்டுன மாதிரி இருந்தா நல்லாருக்கும்..
பெருங்காயம் சேர்த்தாலே அதிகமா சுவை கூடுன மாதிரி எண்ணம்...
என்னதான் வெஜ்னாலும்,கொஞ்சம் nonveg touch இருக்கனும்
நமக்கு புடிச்ச மாதிரி சமைச்சு சாப்டனுனா தனியா இருந்தாதான் முடியும்...
(அப்டிதான் இன்னைக்கும்...என்னைக்காதுதாம் அமையும்....)





சரி..இவ்ளோவும் சாப்டுட்டு,ஒரு அரை மணி நேரம் டீவி பாத்துட்டு....சம்மர் தானே...பகல் நேரந்தான் ரொம்ப..அதுனால சின்னதா தூங்குனா தப்புலாம் இல்ல...👯
இல்லனா இப்டி டைப்பிச்சு போஸ்ட் கூட பண்ணலாம்...

Nd மறந்துடாதிங்க...
Self care isnt selfish.....
#சுய_நலம்_போற்றல்...

#கோடை_விடுமுறை..
#வீட்டு_சோறு


Tuesday 28 May 2019

மொன்னைஸ்..🐾🎻🍭🍬💝👯

20 வயசுக்கு மேல,என்னடா பொறந்த நாளுலாம்...எல்லா நாளி.மாதிரிதானே அதும்ங்கிற இடத்துல....
ஒரு கழுத 25 வயசாகிருச்சுனு 'சில்வர் ஜீபிலி'ய முட்டாயி குடுத்து கொண்டாடிக்கிட்டு இருக்கு ஒரு d o g-dog...💝🍫🍬🍬🍬🍬🍭

தன்னை கொண்டாடிக்கிறதுல எந்த குறையும் வைச்சுக்கிறதுல இந்த குட்டி...(நம்மல நாம கொண்டாடலனா ,வேற யாரு கொண்டாடுவாம்பா......

சரி மூடிட்டு முட்டாயி குடுத்துட்டு போ போ..)

Life is easy with frnds dashங்கல...அது இதுக்குதான்..(ஈஈ...எப்ப என்ன கேட்டாலும் வாங்கி தரும்..)

யோசிக்காம நா help பண்றேனு சொல்லுவா...(இந்த மாதிரி சொல்லக்கூட ஒரு தைரியம் வேணும்ல...)

சொல்ல மறந்துட்டனே ....பாப்பையனோட little princess இவங்க...(..ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா....ஒத்த புத்த பெத்தாங்களே..அது யாரு எங்க அப்பா...

பாடும் பாடித்தொலையும்👈💃💃)

எப்பவும் யங்-கா,துருதுருன்னு....எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி நடந்துக்கனும் நினைக்கிறதே பெரிய விஷ்யம்....இவ வாழ்ந்துக்கிட்டு இருக்கா...

கூட இருக்க எல்லாரையும் கொண்டாட தெரிஞ்சவ...உறவுகளோட வசந்ததை எல்லாரோட கண்ணு வழியாவும் பார்ப்பா..(சுத்தி அண்ணா,தம்பி,அக்கா,darling,லவ்,டாடி...மம்மி...ஹா ஹா...இப்டிதான் மனசாற கூப்டு நிறைவா வாழ்றா)..

பள்ளிப்பருவ நட்பு still remains....இவதான் அந்த சிறுக்கி...

இதுதான் வாழ்க்கை,இப்டிதான் இருக்கனும்ங்கிறதுலாம் இல்ல..சரி ,தப்புக்குலாம் வரையறையே வச்சுக்காம வாழ்ற என்னோட இந்த வாழ்க்கைக்கான மிகப்பெரிய சொத்து இந்த முண்டம் தான்...

நல்லாரு மொன்ன..
கொண்டாடி சேமிச்சுக்கோ நினைவுகள
..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ள....







Friday 10 May 2019

யாஸ்மீ.....🐾🎻

நாம யாரையும் புடிக்காம,எதுவுமே புடிபடாம தனிமைல இருக்கும் போது,நம்ம பக்கத்துலையே உக்கார ஒரு துணை கிடைச்சா....,அவளும் அழகா அழகா கதை சொல்லி சிரிக்க வைச்சா....அவதானே தேவதை...
ஆமா..நிச்சயம் எனக்கு தேவதைதான் அந்தக்குட்டி....


வெளிப்படையா இருக்க மனுசங்ககிட்ட மனசு சீக்கிரமா இணக்கத்தை உண்டாக்கிரும்..(வெளிப்படையானவ...)

எதாது வேல செஞ்சுட்டு இருக்கும் போது,யாராது எனக்கே தெரியாம என்ன photo எடுக்க மாட்டாங்களானு?...சொல்லிட்டே இருப்பா...(candid காதலி…)

ஒரு ஊர்-லனுலாம் இவ கதை ஆரம்பிக்காது...
அவ வீட்டு சொந்த கதைதான் சொல்லுவா..அவ்ளோ சுவாரசியமா...நடந்த மாதிரியே அச்சு பிசறாம சொல்லுவா....அப்டியே ஆழ்ந்து போய்....அவ்ளோ உணர்வுகளையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டுவா...( எங்களோட கதை சொல்லி...நேரம் போறதே தெரியாது...)

எல்லார்கிட்டையும்லாம் பேச மாட்டா...எதாது ஒன்னுனா சட்டுனு அழுதுருவா அழகி...(ஆனா பேசுற எல்லாருக்கும் இந்த குட்டி நல்ல நெருக்கம்...)

Artist-calligraphy பயித்தியம்..( note முழக்க கிறுக்கி வச்சுருப்பா)...

Dressing sense-பக்காவா இருக்கும்...புர்கா போட்டு மூடிக்குவா மெ
ன்டல்...


சொல்ல மறந்துட்டனே...

நல்லா பாட்டு பாடுவா...இல்ல...நிஜமாவே நல்லா பாடுவா...
அவ குரலுக்கு எது பொருத்தமா இருக்கோ ,அத மட்டுந்தான் பாடுவா...( பாடகி மொமென்ட்)...


எல்லாருக்குமே வீடுனா இஷ்டம்தான்...
ஆனா இந்த குட்டிக்கு என்னேரமும் வீடுதான்...
சுமையா மிஸ்,வாப்பா,முயின்.....இதான் அவ வாய்ல இருந்து அதிகமா வர வார்த்த...இந்த மாதிரி புள்ளலாம் பொறக்க குடுத்து வச்சுருக்கனும்னு சொல்லுவாங்கல...அது மாதிரி இருக்கும் இவள பாத்தா...

Be good for no reason ல... Yes...she is being gud for no reason...நல்லவங்களாதான் இருக்கனும்னு சொல்லுவா...யாரையும் கஷ்டபடுத்துற மாதிரி எதும் பண்ண மாட்டா...(ஆச்சரியாமா இருக்கும் இந்த புள்ளையா பார்த்தா).....

Frnd ஆகனும்னா,we have some similaritiesனு ஒன்னுனாச்சும் இருக்கும்ல...
அதான்....நல்லா திங்கும் இந்த நாய்........

ம்ம்ம்...இந்த தேவதைக்குதான் பொறந்த நாள் இன்னைக்கு...

சந்தோஷமா வாழுடி தங்க புள்ள...
Happy happy bday Yasmeen...
Love you sooo much டி பொம்பல....உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா....(தட் லிப்ஸ்டிக் emoji)....
#Last_benchies...(யெஸ்...வெற்றிக்குறி)....
#கியாங்_மியாங்_குள்ளச்சி...











Sunday 5 May 2019

பிரமிள்...🎻🐾


விக்கிதான் அடிக்கடி சொல்லிட்ருப்பான்...பிரமிள் கவிதைகள் புக்கு வாங்கி குடுடி-னு...

நானும் கொஞ்சம் விசாரிச்சேன் கிடைக்கல...

த.ராஜனோட,ஏன் பிரமிளை வாசிக்கவேண்டும் கட்டுரை வாசிச்சேன்...

கண்டிப்பா வாசிக்க வேண்டிய மனுசன் இவருனு கொஞ்சம் தீவிரமா தேடுனதுல
எப்டியோ e-book கிடைச்சிருச்சு...

அது ஒரு முழு தொகுப்பு இல்ல...சில தொகுப்புல இருந்த கவிதைகள்-ல சில பல கவிதைகளை தொகுத்து வச்சதுதான்...

வார இறுதி நாள் சாய்ந்தரம்னாலே சவகாசம்தான்..
நல்லா தூங்கி எழுந்து ,
தலை குளிச்சிட்டு,
ஈரம் முழுசா உலராத தலையோட,
தளர்வா டிரெஸ் போட்டுகிட்டு,
சூடான ஒரு கப் டீ,
கொஞ்சம் தின்பண்டம்லாம் வச்சுக்கிட்டு...
வாசிக்கலானு தொடங்கியாச்சு...





நான் என்னனேய தேடிச் செல்கிறேன் .
இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான்
நடந்து செல்லும் பாதை கவிதையினுைடயது - பிரமிள்
(தட் முதல் பக்கமே impressive).

ஒவ்வொரு கவிதையும் முடியும் போது,அவ்வளவு ஒன்றிப்போய் நகராம மனசுக்குள்ளயே பதிஞ்சிருச்சு...
மனுசன காதலிக்கவே ஆரம்பிச்சுட்டேன்...
நீங்களும் வாசிங்களேன்...








ரஸவாதம் - பிரமிள்

இதயத்தில் உன் மறுப்பின்
வேல் புைதந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முைல சுரந்தாள்
சொரந்ததுேவா
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.


காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..

Friday 3 May 2019

புதிய எழுத்தாளர்களுக்காக 🎵

புதிய எழுத்தாளர்களுக்காக 🎵 -
சுஜாதா பேசுகிறார்..

1.என் எழுத்து நடையை பின்பற்றாதீர்கள்.இதை parody செய்வதுபோல் ஆகிவிடும்.அது உங்களுக்குள் ஒலிக்க வேண்டும்.

2.முழுக்க முழுக்க கற்பனையான எழுத்தில் எழுத முடியாது.நான் பார்த்த,கேட்ட,பங்குபெற்ற சம்பவங்களை அப்படியே எழுதாமல் பெயர்,இடம்,காலம் இவைகளை மாற்றி மற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் உரையாடல்களையும் கலந்து எழுதுகிறேன்.இந்த முறைதான் என் வெற்றிக்குக் காரணம்.

3.நிறைய ,மிக நிறையப் படிக்க வேண்டும்.கதை எழுதுவதற்கு மட்டுமின்றி சில கதைகளை எழுதாமலிருப்பதற்கும் அது உதவும்.

4.பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.அது நம் மரபு மட்டுமன்றி இந்த மொழியின் பல்வேறு வாய்ப்புகளை நமக்கு காட்டும். நல்ல தமிழ் எழுதப் பழகுவது நல்ல பேனாவை நல்ல தூரிகையை வைத்துக்கொண்டு சித்திரம் வரைவது போல்.

சுஜாதா - எழுத்தின்பம்...





நிறைய தமிழ் படங்கள் சின்ன வயசுல பாத்தது...(90s kid-ல)

காலேஜ் வந்ததுகப்றம் கொஞ்சம் பாட புத்தகம் தாண்டி வாசிக்க ,சின்ன புள்ளைல பார்த்த படங்கள எல்லாம் திருப்பி பார்க்க ஆரம்பிச்சக்காலம்.
சுஜாதாவும்,வைரமுத்துவுதான் முதல வாசிச்சேன்..

Straightஆ directed by தாண்டிதான் படம் பத்து பழக்கம்..
அன்னைக்கும் அப்டிதான்.
கண்ணத்தில் முத்தமிட்டால் ...
பாதி போகுறதுக்குள்ளவே...இதுமாதிரி நாம எங்கயோ அனுபவ பட்ருக்கமே....சுஜாதவா இருக்குமோனு பார்த்தா.. Yes...அவரேதான்...
Dialogue by-சுஜாதா...
அப்றம் இன்னும் ஆர்வமா சுஜாதவ வாசிக்க ஆரம்பிச்சுட்டேன்...


அடிப்படை நன்றாக இருந்தால் அனைத்தும் சிறப்பாக அமையும்..
அப்படிதான் வாசிப்பும்..
எனதடிப்படை வாசிப்பு சுஜாதாதான்..
கதைகளில் புது நோக்கு...
அதிக அறிவியல் புணைவு கதைகள்...
எதாவது ஒரு புது விஷ்யங்கள் தெரிஞ்சுக்கலாம்...
அதிக வழ வழ கொழ கொழன்னு இல்லாம இருக்கிறது தனி சிறப்பு..


இவரின் கதைகளில் எதிர்பாரத திருப்பங்கள்  மிகவும் எதிர்பார்ப்பாக இருக்கும்...
வாசிக்க மிக சுலபமாக இருக்கும்...
வித்தியாசமான கதைக் களங்களில் புகுந்து விளையாடியவர்..ஆங்கில வார்த்தைகளும்,அறிவியலும் அதிகம் ஈம்ர்க்கும்...
எழுத்தின் வழி இன்பம் காண விளைபவர்களுக்கு சுஜாதாவின் படைப்புகள் நிச்சயம் நல்ல விருந்துதான்...
வாசித்து இன்புறுவோம்...


#பிறந்தநாள்_வாழ்த்துகள்_சுஜாதா

Thursday 2 May 2019

புத்தகமும்...புகைப்படங்களும்....

நாமலாம் பொதுவாவே sentimental kind of மனுசங்க தான்....
புடிச்சத பண்ணனும்னா பாத்து பாத்து பண்ணுவோம்...
மனசுக்கு நெருக்கமான பல விஷ்யத்துக்கு sentiment பாப்போம்...

அதே மாதிரிதான் புத்தகமும்,புகைப்படமும்...எழுத்தும்,ஓவியமும்....
மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கக்கூடியது...

அதப்பத்தி எழுதனும்னா மைபேனாலதான் எழுதனும்னு ரொம்ப நாளுக்கப்றம் parker பேனால மை கடன் வாங்கி நிரப்பிட்டு எழுதிட்ருக்கேன்...

ஓய்வே இல்லாதது..நம்ம எண்ண அலைகள்தாம்...

அதிகபட்சமா எல்லாரும் எழுதுனதுதான்...சொல்லப்பட்டதுதான்...

அது அது எழுதுறவங்களோட,வாசிக்கிறவங்களோட பாணிக்கு,கோணத்துக்கு ஏத்தாப்ல மாறுபடும்....

அந்த பார்வை நமக்கு பிடிச்சா கொண்டாடுவோம்...இல்லனா கண்டுக்காம விட்றுவோம்...அப்டியும் இல்லனா கழுவி ஊத்துவோம்...

அப்டியான என் பார்வையில்...

புத்தகமும்,புகைப்படமும்..
எழுத்தும்,ஓவியமும்....

நாம ஒரு மேற்கோள் பாத்துருப்போம்
"Photography is the story i fail to put into words".

எழுதினத வாசிக்கும் போது கற்பனையா நாமளே ஒரு காட்சிய உருவகப்படுத்தி மனத்திரைல பாப்போம்...

புகைப்படம்
காட்சியாவே நம்ம கண் முன்னாடி இருக்கும்...அதை எடுக்கிறவங்க கற்பனை இருக்குமே,பாக்குறதுல கற்பனையோட பங்கு குறைவுதான்...

பல கவிதை புத்தகத்துல கவிதைக்கு தகுந்தாப்ல படம் வரைஞ்சிருப்பாங்க...
அந்த படத்தையும் கவிதையையும் சில சமயம் பொருத்தியே பாக்க முடியாது...புரியாதும் வேற...
கவிதையோட வாசிப்புல கற்பனைய மிதக்க விட்ட அதவிட அருமையான ஒரு படம் நமக்கே கிடைக்கும்..

படங்கள பாக்க அதிக மெனக்கெடல் தேவை இல்லை...ஆனா வாசிப்புக்கு ஆர்வமும் கொஞ்சம் மெனக்கெடலும் தேவை...

கற்பனை,நிஜம் இதுதான் ஆதாரம் எல்லாத்துக்கும்..

ரெண்டுலையிலும் லயிக்கலாம்...
ஆனா கற்பனைலதான் ஆர்வமதிகம்...

கலைகளை வளர்த்து
கவலை மறந்து
காற்றுப்போல் அன்பு செய்வோம்...🐾💙





பேய் சேவல்...🐓🐣🐤🐥


        




         உண்மைய சொல்லனும்னா ,இது பேரு சாம்ப சேவதான்...

         சுமையா மிஸ்ஸோட அம்மா வீட்ல இருந்து ,இந்த சாம்ப சேவல கொண்டு வந்தாங்க...மிஸ் விட்ல இருக்க எந்த கோழி கூடவும் இது சேர்ந்துக்கல.....

         சாம்ப சேவ வளரும்போது ,எப்போதும் போல சேவலுக்குரிய குறிகுணங்களோட தான் இருந்துச்சு...

         ஒரு கட்டத்துல, சேவல் sir வயசுக்கு வந்துருச்சு....
         அதுக்கப்றம் தான் கூத்தே...
(என்னடா பொம்பள விஷ்யமா,அது இதுனு நினைக்கக்கூடாது...)


          இரவு 12 மணி...

          சேவல் கொக்கக்கரிக்க ஆரம்பிக்குது...
(கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
குத்து வாங்கும் அன்பிலே-லாம் இல்ல...)


        சும்ம்மா...நடுராத்திரி பேய் மாதிரி கத்துது...வீட்ல யாரும் தூங்க முடில அன்னைக்கு...

         சரி ...சரியாகிறும்னு இருந்தா....தினம் ராத்திரியானாலே இதே அட்டகாசம்தான்...

        அது பேரு பேய் சேவனே ஆகிருச்சு...

        அக்கம்பக்கத்துல உள்ளவங்களாம் சண்டைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க...


         என்னடா இந்த சேவ இப்டி பண்ணுதேனு போய்ட்டே இருக்க....

        ஒரு நாளு சுலைகா ராத்தா ,அவங்க பேரன கூட்டிக்கிட்டு சுமையா மிஸ் வீட்டுக்கு வந்துருந்தாங்க....


        எல்லாரும் வெளில நின்னு பேசிட்டுருக்காங்க....

       இந்த சேவலுக்கு பித்தம் தலைக்கேறிருச்சு...
      அந்த சின்னப் பையன் மேல வந்து றெக்காயால அடிக்குது...அத துறத்த துறத்த திரும்ப திரும்ப அடிக்க வருது....


        உள்ள வந்து கதவ அடைச்சிட்டாங்க..
றெக்கய விரிச்சிக்கிட்டு,அவ்ளோ கோவத்தோட வந்து அந்த கதவுல இருக்க இரும்பு கம்பில.....டமார்.......


        என்னடா செத்துருச்சானுலாம் பாக்காதிங்க...அவ்ளோ மொக்கலாம் இல்ல அது ..

மோதுனதுகப்றம்தான் அடங்குச்சு....


அடுத்த நாள்,

         ரெண்டு தெரு தள்ளி இருக்க ,
தெரிஞ்ச பையன் ஒருத்தன் மிஸ் வீட்டுக்கு வரான்..

        முயின் காகா(அண்ணன்) இருக்காறானு கேட்டுக்கிட்டே உள்ள வந்து, சேவலுக்கு சாப்பாடு போடுற முயினையும் பாக்றான்...சேவலையும் பாக்றான்.

       ஓடி வந்து,மிஸ் பையன் முயின் கிட்ட,


"முயின் காகா,முயின் காகா....என்கிட்டயும் ஒரு சேவல் இருக்கு...நாம சண்டைக்கு விடலாமானு கேட்ருக்கான்..."

         எவன்-டா இவன் லூசுனு...அதலாம் வேணாடா தம்பி...உன் சேவல் செத்துரும்னு- நல்லது சொல்லிர்க்கான் முயினு...

       அந்த அடங்காத பையன் கேக்காம ஒரு சனிக்கிழமை காலைல,,அவனோட சேவல தூக்கிட்டு முயின் வீட்டுக்கு வந்துட்டான்....

       சரி...இந்த பையன் அடங்க மாட்டானு....

முயின் வீட்டு கொள்ளப்புறம்...
கொஞ்சம் காலி இடம் ..
அத சுத்தி  வீட்டு மரங்க...

சண்டைக்கு களம் தயார்...
போட்டியாளர்,பார்வையாளர்கள் எல்லோரும் தயார் நிலையில் இருக்கின்றனர்...இன்னும் சிறிது நேரத்தில் சேவல் சண்டை தொடங்கவிருக்கிறது .....


சமைச்ச கையோட சுமையா மிஸ் கதவோரமா நிக்க,
என்னடா நடக்க போகுதுனு மிஸ்ஸோட குட்டி பொண்ணு எட்டிப்பாக்க,
என்னமோ நடக்க போகுதுனு முயின் பாக்க,
என் சேவல்தான் ஜெயிக்க போகுது அந்த பைய பாக்க....


சண்டைக்கு விட்டாச்சு ...


       முதல அந்த பையனோட சேவல்தான்,பேய் சேவல அடிக்குது...


அடுத்த 10 வினாடி மரண அமைதி....


அடுத்து, மண்ணுல புழுதி கெளப்பிக்கிட்டு,றெக்கய விரிச்சுக்கிட்டு ...மட்டு மட்டு மட்டுனு அவ்ளோ கொத்து கொத்துது பேய் சேவ...


அந்த சேவலுக்கு இரத்தம் ஒழுகுது....
ஒரு அடி அடிச்சது கூட அதுக்கு மறந்து போயிருக்கும்...


பாத்துட்டுருந்த பையன் பதறிப்போயி ,என் சேவ செத்தேப்போயிரும்னு எடுத்துட்டு ஓடுனவந்தான், மிஸ் வீட்டு பக்கம் தலை கூட வைச்சு படுக்கல....


சுமையா மிஸ் வீட்லையும்,
இதுக்கு மேல இத வீட்ல வச்சுருந்தா சரி பட்டு வராதுனு,அவங்க அம்மா வீட்டுக்கே பார்சல் பண்ணிட்டாங்க.....


மறுநாள் 11 மணி இருக்கும்...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு....சுமையா மிஸ் ரிங்டோன்....

மிஸ்ஸோட அம்மா,அந்த பக்கம்...

ஏய்,அந்த சேவல் கறியே நல்லாலடி,...சக்க சக்கையா....குழம்பு கூட டேஸ்ட் வரலனு சொல்லி சலிச்சுக்கிட்டாங்க...

சுமையா மிஸ் ,ஃபோன வச்சுட்டு அடுத்த சேவல் வாங்க ப்ளான் போடுறாங்க....

தொடரும்...




கதை:மல்லிகை
படங்கள்:ரோஜா

Sunday 28 April 2019

சோழனின் காதலி-ராஜகுரு..📜

சோழனின் காதலி-ராஜகுரு..📜


படங்கள்: ப்ரசன்யா கலை

பேசிக்கலி,love story எல்லாருக்கும் புடிக்கும்...
இதுல இருக்க நியாயம் வெங்காயம்லாம் பாக்கம படித்தால் நல்ல புத்தகம்..

          ராஜ மிடுக்கு குறையாமல் வரைந்திருக்கிறார்..
கிட்டத்தட்ட 36 பக்கங்கள் கொண்ட குறு நாவல் ,பெருநில மன்னனின் காதல் பற்றியது...

         அது இது என்று இல்லாமல் கச்சிதமாக முடித்திருக்கிறார்...

          வர்ணனை அழகு...வார்த்தைகள் அலங்கரிப்புகளும் சிறப்பு..

          வரலாற்று நாவல்கள் வாசிப்போருக்கு மதிய இடைவேளை நேரங்களில் வாசித்து மகிழ நல்ல புத்தகம்...

           புத்தகம் வாசித்து நம் கற்பனையை உயிர்ப்போடு வைத்திருப்போம்...

புத்தகத்திலிருந்து...



மாமன்னன் ராஜபுரவியில் ஆரோகணித்திருந்தாலும், அவன் சிந்தையெல்லாம் தன் சிந்தைக்கவர்ந்த சிந்தினிப் பாவையின் சிற்ப அழகிலும்,கிண்கிணி சிரிப்பிலும்,கிள்ளை மொழியிலுமே சுழன்று சென்றது...








Thursday 25 April 2019

கியாங் மியாங் குள்ளச்சி...🐾


         பப்பி,ஜாக்கி,ஷீரோ,டாமி,ஜூடோ போன்றவைகளின் வரிசைகளில்

கியாங் மியாங் குள்ளச்சி...

(என்னடா சைனீஸ் பேரு மாதிரி இருக்குனுலாம் யோசிக்காதிங்க...இது நம்ம தமிழ் அழகிதான்...)


        இது பூனைக்குட்டி , நாய்க்குட்டிலாம் இல்ல...எஸ்...கோழிக்குஞ்சே.....




        சுமையா மிஸ் வீட்ல ,முன்னவே நிறைய கோழி,சேவல்,மற்றும் அவற்றின் குட்டிகள் எல்லாம் அனேகம்..

        வண்ணம்னாலே குழந்தைங்களுக்கு அளப்பரிய ஆனந்தம்,அதீத ஆர்வம்...
கலர் கோழிக்குஞ்சு...(நம்ம சின்ன பிள்ளைல எல்லாரும் எவ்ளோ அடம் பிடிச்சுனாலும், வாங்கிருப்போம்..நாள் முழுக்க அது பக்கத்துலயே உக்காந்து ,அத பாத்துக்கிறேனு பாத்துக்கிறேனே கொண்ணுடுப்போம்...)


         ஆனா இது கொஞ்சம் பெரிய குழந்தை...சுமையா மிஸ்ஸேதான்...

         5 கலர் கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்தாங்க...அதுல 4  செத்துபோயிடுச்சு...
பொழச்சது ,நம்ம கியாங் மியாங் தான்...

      Who is the hero?who is the hero? காக்க வந்த வாத்தியாரோ...back ground music add பண்ணிக்கோங்க...


       கொஞ்சம் கெத்து அதுக்கு...ஆனா வீட்ல முன்னாடி இருந்த கோழிங்க அதுங்களோட இருப்பிடத்த தக்க வைச்சுக்க,நம்ம கியாங் மியாங் கிட்ட சண்ட போட வேண்டியாதாகிருச்சு...
சண்டைல ,நம்ம சேவல் சார்(சுமார் 4-5 கிலோ...நல்ல உயரம்...) கி.மியாங்கோட கழுத்தாம் பட்டைலையே கொத்த ,அது வாயில கொஞ்சம் ரோஸ் கலர் முடி..ஃப்ப்ப்ப்-னு ஊதுது...

         தலைக்கு வந்தது ,தலைப்பாவோட போச்சுனு கி.மி யெஸ் ஆகிட்டா...
வீரத்தழும்போட அன்னைல இருந்து வீட்டுக்குள்ள மட்டுந்தான் அதோட ராஜங்கம்...


        அதோட வீடு சுமையா மிஸ் மடிதான்...

       கி.மி. அதுக்கப்றம் மனுசங்க கூட அதிக இணக்கமா இருக்க ஆரம்பிச்சிட்டா...சுமையா மிஸ் வாசத்துக்கூடவே சுத்துவா ...

       அத கண்டுக்கலனா கியாங்க் மியாங்க்னு கத்தும்...
பொழுதா பொழுதிக்கும் திண்பதையே மட்டும் வேலையாக கொண்டிருப்பாள்..
தொண்ட வரைக்கும் சாப்டுவா...
வயிறு கல்லு கணக்கா ஆகிடும்...தண்ணிக் குடிச்சதும் கொழுக்கு மொழுக்குனு ஆகிடும் அழகிக்கு...

        எல்லாக் கோழிக்குஞ்சும் நின்னுக்கிட்டே தூங்கும்னா,மேடம் மட்டும் கால தரைல விரிச்சு,கழுத்த தரைல வச்சு தூங்கும்...பாக்கவே ஆசையா இருக்கும்...


       இப்டி வீட்டுக்குள்ளவே பொழுத போக்கிட்டு இருக்கனால,உடம்புல கொஞ்சம் கூட சூரிய வெளிச்சம் படல...எம்புட்டு சாப்புட்டும் கொஞ்சம் கூட வளராம குக்னிகூயுவாவே இருந்து....


        அதுக்கு சுமையா மிஸ் வீட்டுக்காரரு incubator ஒண்ணு ரெடி பண்றாரு...
குண்டு பல்ப் மாட்டி ,கி.மியவும் உள்ள அனுப்பியாச்சு...
அதுக்கு அவ்ளோ சுகம்ம்...ரெக்கையா விரிச்சுட்டு திரும்பி திரும்பி நின்னு சூட சுகமா வாங்கிக்கிது...
(கார்ட்டூன் பாத்துட்டு பீத்தல்ஸ்லாம் விடல..நிஜமலே கி.மி இப்டிதான்..)


        சுமையா மிஸ் வெளியூர் போறப்ப,தனியா போகனும்னா கொஞ்சம் uncomfortable ஆ feel பண்ணுவாங்க...
ஆனா இந்த வட்டம்,ரொம்ப நிதானமா உற்சாகத்தோட கெளம்புனாங்க...


       வீட்ல தனியா விட்டுட்டு போக மனசில்லாமா,ஒரு கூடைக்குள்ள துணிலாம் போட்டு கி.மி யா தூக்கிக்கிட்டே ,நைட் சென்னைக்கு air பஸ்-ல ஏறிட்டாங்க...


       பஸ் நகர நகர கொஞ்சம் அலுப்புல அசந்துட்டாங்க மிஸ்...
எப்பவும் கிங் மிங்-னு கத்திட்டு இருக்கவளோட குரளயே காணோம் ரெண்டு மணி நேரத்துக்கு...
கோழிக்குஞ்சு செத்துருக்கும்...என்ன பண்றதுனே புரியாமா கூடைல பாத்தப்ப...செத்து போன மாதிரியே கிடந்துச்சு...


        ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கப்ப திடீர்ன்னு.....கிங் மிங்....கிங் மிங்-னு ...சத்தம்...


       அடியேய் கியாங் மியாங் குள்ளச்சி என்று செல்லமாக அடித்து மடியோடு அணைத்துக்கொண்டார்கள்...
ஆசுவாசமடைந்தோம்....😄🐾💝
தொடரும்....


படங்கள்-இஜாஸ்
கதை-மல்லிகை...






Wednesday 24 April 2019

செல்லத்தாயி💞🐾




ஒரு புளிய மரத்தின் கதை..


தலைப்பே விஷ்யத்த சொல்லிருச்சு ..

நம்ம ஊருலலாம் ஒரு சில இடம் இருக்கும். அதை சொல்லி அழைக்கிற அடையாளமே அழிஞ்சு போனாலும்,அதனோட பெயரை அடையாளமா சுமந்து நிக்கும்..அத பத்தின நாவல் தான்..

மனித  சௌகரியத்துக்கு ஏற்றாற்போல்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைப்பான் மனிதன்..அதற்காக என்னவெல்லாம் காலம் காலமாக செய்து வந்துக்கொண்டிருக்கிறான் என்பது இந்நாவலை வாசிக்கும் போது, கண்முன் ஓடும்..அதில் அதிகம் அடிவாங்கியது இயற்கைதான் என்பதும் புரியும்..


கதைக்கு வருவோம்..
நிறைய தலைமுறைகள பார்த்த அந்த அலட்டிக்காத புளியமரம்தான் ஹீரோ..
கதை சொல்லியா வர தாமோதர ஆசான் மாதிரி ,நமக்கும் ஒருத்தர், இருக்க மாட்டாங்களானு ஏங்க வைக்கக்கூடிய எதார்த்தமான மனுஷன்..


எளிமையான நடைல,நாகர்கோவில் வழக்குல  சுவாரஸியமா கதைய தெறிக்க விட்ருக்காரு ஆசிரியர் சு.ரா..


புளியமரம்,காத்தாடி தோப்பு,தாமோதர ஆசான்...அந்த செல்லத்தாயி ...மனதோடு பதிந்து விட்டது...

புத்தகத்தில் இருந்து,








1956-57  ஆண்டுகளில்,சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரியவில்லை என்று எண்ணிக்கொள்வேன்...


#thank you chandu for this book
#கண்மணி..💞

பையித்தியம்...🐾

நான் சண்டையிடும் நேரங்களில்
என்னை நான் எட்டி நின்று பார்த்து
ச்சை..கருமத்தை என்று சபிக்க வேண்டும் போலுள்ளது...🙄

அன்பு செய்யும் நேரங்களில்
நானே எனக்கு முத்தமிட்டு கொண்டு
ப்பா ...லட்டுக் குட்டி...எவ்ளோ அழகு! என்று கொஞ்ச வேண்டும் போலுள்ளது ..😄

Tuesday 23 April 2019

புத்தக தின வாழ்த்துக்கள் 🐾



எழுத்து,உலக தத்துவங்களுக்கும் சட்டை மாட்டுவதாய் இருக்க கூடாது-சு.ரா..

எழுத்தின் நடையும்,வார்த்தைகளின் லாவகமும் உபயோகிக்க உபயோகிக்கதான் பழக்கத்திற்கு வரும்.


தாம் எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டும்.பாராட்ட வேண்டும் என்றெல்லாம் இல்லை.(ஆனால் அப்ப்டி நடந்தால் மகிழ்ச்சிதான்...இல்லையென்று சொல்வதற்கு ஒன்றுமில்லை..)
அதற்கெல்லாம் மேல் எழுத்தின் மேலுள்ள பித்து அவர்களை ஆட்டி வைக்கும் போது ,அணைத்து முத்தமிடும் போதும்,தேனீர் கோப்பையே நீட்டி அவனை எழுத வைத்தேத் தீரும்..(உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களில் தேனீர் கோப்பை பெற்ற இடத்தை,பிரியாணி தட்டுகளால் கூட பெற முடியவில்லை...)


தரமான எழுத்துக்களை தேடி படிக்கலாம்.  
மேதாவிகள்..சரி மேதைகள் பரிந்துரைக்கும் எழுத்துகளைப் படிக்கலாம்...மற்றவர்கள் விருதளித்து கொண்டாடுவதை வாசிக்கலாம் என்று இல்லாமல்,
அதையெல்லாம் ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு எந்த வகையான எழுத்துகளில் விருப்பம் என்று தெரிந்தறிந்து ,புத்தகங்களை தேர்வு செய்து வாசியுங்கள்...(எல்லா புத்தகத்தையும் வாசிக்க முடியாதுல நம்மளால).
(மற்றவர்களுக்கு பிடித்திருக்கும் எழுத்துக்கள் தங்களுக்கும் பிடித்திருக்கும் என்றெல்லாம் இல்லை..)


கலைகளில் வழி வலிகள் தீரும்..மாயும்..
புத்தக வாசிப்பு ஒரு வகையான கலைதான்...
வலிகளை தீர்க்கும்.மாய்ந்தே விடும்..
(கலைகளை தேர்ந்தெடுப்பதும்,அதுவே தேடி வருவதும் சுயம் சார்ந்ததே..).

புத்தக வாசிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவெல்லாம் இல்லை..
பிடித்தால் வாசியுங்கள்..(நேரமில்லை என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லாதீர்கள்..பிடித்த விஷயங்களுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்க நம்மால் முடியும்..)


புத்தகங்கள்
பேசும்,தொண்டை வறளச் செய்து அழ வைக்கும்,அரவணைக்கும்,அதட்டும்,கிண்டல் செய்யும்,கிச்சு கிச்சு மூட்டும்,பித்தனாக்கும்,புத்தனாக்கும்..
புத்தகங்களை காதலித்து பாருங்கள்..


எழுத்தாளனை , இறந்த பிறகுதான் கொண்டாட வேண்டுமெல்லாம் இல்லை..

வாசகர்களாவோம்..

பிடித்த எழுத்துக்களையும்,எழுத்தாளனையும் கொண்டாடுவோம்..

புத்தக தின வாழ்த்துக்கள்...


-இப்படிக்கு வாசகி..


Friday 19 April 2019

சுலைகா ...💞

மனுஷி...
.சுலைகா
ராத்தா...

         ராத்தாவென்றால் அக்கா முறை...
அவங்கள எங்க கிராமத்துல எல்லாரும் அப்டிதான் கூப்டுவாங்க.. ..
நல்ல கலர்..
50 வயசு மாதிரிலாம் தெரியாது...
ஊர்லயே முதல மச்சி வீடு கட்டுனவங்க...
9 குழந்தைங்க ராத்தாவுக்கு...
சின்ன வயசிலருந்தே எல்லாருக்கும் உதவுற குணம் ..

        சின்ன வயசுல குளத்துக்கு, குளிக்க போகும்போது முதுகு தேய்க்க கல் எடுத்துட்டு போகுமாம்...
குளத்துல குளிக்கிற எல்லா பொம்பலைங்களுக்கும் முதுகு தேய்ச்சு விட்டு கடைசியா குளிச்சிட்டு வருமாம்...

       ஊர்ல இறந்தவங்கள குளிப்பாட்ட யாருக்கும் பெருசா ஒத்துகாதாம்..
ராத்தா ..ஊருக்குள்ள எங்க சாவுனாலும் அவங்கள குளிப்பாட்ட போய்டுமாம்...
(அவங்க வழக்கப்படி..குதம் குய்யம் எல்லாத்தையும் நல்லா சுத்தம் பண்ணி குளிப்பாட்டுவாங்களாம்).
மூஞ்சி சுழிக்காம வேல செய்யுமாம்...

        யாராது வீட்டுக்கு போனா கூட சும்மா இருக்காதாம்...
எங்க வீட்டுக்கு வந்தா கூட,
சுமையா மிஸ் குடுங்க காய்கறிலாம் வெட்டித் தரேனு சொல்லிட்டு,செஞ்சு குடுத்துட்டுதான் போகும்...

       மினிமம் எப்பவும் மணிபர்ஸ்ல 500ரூவாவாது வச்சுருக்கும்..
யாரு காசு கேட்டாலும் குடுக்கும்...கணக்குல எழுதி வச்சுக்கோங்க...என் காலத்துக்கப்றம் என் புள்ளைங்களுக்கு குடுத்துருங்கனு சொல்லிடும்..


        நல்ல ராத்தா...எல்லாருக்கும் பிரியமானவ..
ஆனா வீட்ல இருக்க பிள்ளைகளுக்கு,எல்லாருக்கும் அம்மா வேல செய்யுதுனு வருத்தம்...ஆனா எல்லா புள்ளைங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சு பேர குழந்தைங்களையும் நல்லா பாத்துக்குச்சு...
இப்படியே அதோட வாழ்க்க ரொம்ப நிறைவா போய்ட்டுருந்துச்சு...
ஒரு நாள்...

       வயிறு ரொம்ப வலிக்குதுனு படுத்ததுதான்...
வயிறு குடல்-ல புத்து நோய்னு சொல்லிட்டாங்க...(colon cancer)
வயிறுல புத்துக்கட்டி அங்கிட்டும் இங்கிட்டும் உருளுது.
ஆப்ரேசன் பண்ணாலும் ரிஸ்க்னு சொல்லிட்டாங்க...
ஊரே ரொம்ப வருத்தப்பட்டுச்சு...

       வயிறு வலில சுருண்டு சுருண்டு படுத்துக்கும்...யாருக்கும் கேக்காம அழுதுகிட்டே இருக்கும்...சாப்டவும் முடியாம சாப்டது வெளியவும் போக முடியாம நரக வேதனை அதுக்கு....பட்டினியாவே கிடந்துச்சு..உடம்புல ஒன்னுமே இல்லாம ரொம்ப இளைச்சு போச்சு ..

        அது அந்த நிலைமைலயும்,
நா இந்த வாழ்க்கைல பண்ண பாவத்துக்கு, அல்லா! என்ன இப்பவே தண்டிச்சிட்டாருனு சொல்லி அந்த நோயயும் அர்த்தமுள்ளதா ஆக்கிகிச்சு ....இனி எனக்கு பிறப்பே இருக்காதுனு பெருமையா சொல்லிக்கும்..
.

        எங்க அண்ணன்-னா அதுக்கு ரொம்ப  இஷ்டம்...அவன் போய் பாத்ததும்..அவனோட மடில படுத்துக்கிச்சு..
அவனுக்கு தொண்டலாம் வறண்டு,அழுக முட்டிட்டு நிக்குது..
வீட்டுக்கு வந்து சொல்லிக்கிட்டே சத்தம் போட்டு அழுதான்..


       ஒரு மாசத்துக்கு முன்னாடி ராத்தாக்கூட எடுத்த செல்பி frame பண்ணி வீட்டு சுவர்ல தொங்குது ...அந்த குளத்துக்கரையும் அவள் பெயரை சுமந்தே நிற்கிறது...


        ராத்தா ..ராத்தா...🐾

(கதைக்கும் நேரங்களில் தோழி கூறியது)...



Tuesday 16 April 2019

ஆதி அத்தி🐾📜

ஆதி அத்தி...
ஆதிமந்தி💞ஆட்டனத்தி💝மருதி...

வரலாற்று நாடக நூல்..
ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் காவிய நூல்-அப்டிங்கிறது ஆசிரியர் குறிப்பிட்டது..
ஆனால் மருதிதான் -காதல்க்காரி..🐾💝

கி.பி.முதல் நூற்றாண்டுல நடந்தது மாதிரி கதைக்களம்..ஒரு வரலாற்று நிகழ்வ தொகுத்து ஆசிரியர் அழகான நயமிக்க தமிழ்-ல கொடுத்திருக்காரு..

நீ என்ன எவ்ளோ love பண்றங்கிற கேள்வி காலாங்காலமா கேட்டுட்டு வராங்க😂..
அதுக்கு உவமையோட பதில் சொல்லி பிச்சுருக்காய்ங்க....

மருதி -பொன்னி
மருதி-அத்தி
ஆதி-அத்தி
வசன அமைப்புகள்
கிலுகிலுப்பு...

மருதி-பொன்னி...தோழிகள் பேசுவது போல் ஒரு காட்சி வரும்...(இன்று வரை பெண் பிள்ளைகள் அப்படிதான் பேசிக்கொள்கிறார்கள்...😂😄🤗)

சங்க கால பாடல்களுடன் சேர்த்து அருமையான படைப்பாக உள்ளது.  ஒரே மூச்சில் முடித்து விடலாம்...

வாசிப்பிற்கு பின் காவிரி,காவிரி பூம்பட்டினம் பற்றியதொரு பெரிய மதிப்பு வருமென்பது உறுதி..

காதலின் நாயகி மருதி...
அந்த பாடல்.


"பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை யாரறிவார்..?

ஆதிமந்தி பாடுவது:

பெண்ணணங்கே போய் வருவாய்- உன் 
பேரன்பை நானறிவேன்..

ஆட்டனத்தி பாடுவது:

அன்புடனே கால்வருடி ஆதரித்தாய் பெண்மணியே
என்றனுயிர் தான் கொடுத்த தெய்வமன்றோ நீ யெனக்கே?

ஆதிமந்தி:

இன்பமெல்லாம் எனக்களித்தாய்- நம்
இருவருள்ளம் ஒன்றலவோ?

இருவரும் இணைந்து..

பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை மறவோமே...!


முடிவில் கண்முன்னே ஒரு நாடகம் அரங்கேறியதை,நம் கற்பனைகள் அரங்கேற்றியதை நிச்சயம் உணரலாம்...



Monday 15 April 2019

நிழல்கள் - நகுலன்📜📚

நிழல்கள் - நகுலன்

மனதின் பைத்திய நிழல்கள்...

எழுத்தாளன் மற்ற எழுத்தாளனிடம் அபிப்ராயம் கேட்பதில்லை...அவனுக்கு சரியென்றால் சரிதான்...

புரிந்துக்கொள்ளவே கடினம் என்பதை புரிந்துக்கொள்பவர்களைதான் இவ்வுலகம் பேசும் .....
அதை உருவாக்கியவனை கொண்டாடும்...
நகுலனைக் கொண்டாடுவோம்...
மனம் எனும் பையித்திய நிழல்...💗🐾

"மனம்தான் மதத்தைவிட பெரியது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..." என்று எழுதியதையெல்லாம் கணக்கில் சேர்க்காமல் எழுத்தின் மீதுள்ள காதலையும்,கலையின் ரசத்தையும் மட்டும் ரசித்தால் நல்ல நாவல் தான்...💗💞

ஆன்ம தேடல்..




Wednesday 10 April 2019

சமுத்திரா...😍💝


திருச்சி பொண்ணு...(இத எதுக்கு இந்த நாயி இப்போ சொல்லுது...அதானே..மேட்டர் இருக்கு பையா)...😄
எங்க ஊர்ல கடல்-லாம் கிடையாது(அதான் உலகத்துக்கே தெரியுமேடா....)
காவிரி ஆறுதான்...(ஹச்ச்ச்ச்சோ..விஷ்யத்துக்கு வா....)🤗
ஆத்துலலாம் குளிக்க எனக்கே கூச்சமா இருக்கும்...(அதலாம் பொண்ணுங்களுக்குதானே இருக்கனும்...உனக்கு ஏன் இருக்குது...)..😎😎
என்னோட நியாபக வளையங்கள சுத்தவிட்டு...(சொயிங் சொயிங்.....சொயிங்)😍😍😍😍🎯🎯
2004 ல போய் நிறுத்துவோம்...
ஆறாங்கிளாஸ்...
அமலாஸ் ஸ்கூல்...
Higher secondary வேற...
Christian school..(அவிங்க கோயிலுக்கு போகனும்னா டூர் கூட்டிட்டு போவாங்கள..அதே group தான்..).
😂😋
School டூரு...
எப்படியோ அழுது புரண்டு ...அம்மா போ கூடாதுனு சொல்லி..அப்பாட்ட நைஸா ஐஸ் வச்சு, ஒரு வழியா.. டூர் போக நைட் school -ல இருந்து கிளம்பிட்டோம்...
😅
அடுத்த நாள்...காலைல...
வேளாங்கண்ணி கடல்...அன்னைக்குதான் முத முறை கடல்-ல பாக்குறேன்...☺☺☺
மேகமா...வானாமா...இல்ல கடல்னா இவ்ளோ தண்ணி இருக்குமா....முன்னாடியே கடல் பாத்த புள்ளைங்க சொன்ன கதலாம் வேற.... அறியா பிள்ளை...school டீச்சருக்கு டிமிக்கி குடுத்துட்டு கால் மட்டும் நனைச்சுட்டு வந்து....கொஞ்ச நேரம் வெயில் ல நின்னா...ஒரே உப்ப்ப்ப்புபுபு கால்ல...😌😌😌
ஓ..இதான் கடலா....என்ற ஆச்சரியத்தோடவே டூர் முடிஞ்ச்சு...(இதுல என்னானா....போற வரைக்கும் தெரியாது..வேளாங்கண்ணில கடல் இருக்கும்னே...அடிப்பாவினு தலைல அடிச்சுக்காதிங்க)...😏😏
காலங்கள் கடந்து போய்டுச்சு...(எதுவரைக்கும்னு கேக்காதிங்க...பழைய காமெடி...)
🤕🙃
2011...
12ங் கிளாஸ் result வந்து....engg. counselling....🤑🤑
அந்த counselling அப்பதான் சென்னையவே மொத மொத பாக்குற பல caseல நானும் ஒருத்தி.....(ஈஈஈஈஈஈஈஈ...)😬😬😬😬😬
அப்ப நாச்சும் அந்த மெரினாவ கண்ணுல பாத்துடலானு இருந்தேன்...ஆனா...நான் வளத்தத் தாய், என்னய counselling முடிச்ச கையோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருச்சு....(idiot பெல்லோ....)😱😬
காலேஜ்க்கு போறதுக்கு முன்னாடி நாள்....
அந்த..."பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா......இந்த பூமிக்கு நான் வந்தது குத்தமாம்மா"...பாட்டு கேட்டுட்டு கண்ணாலயும் மூக்காலயும் அம்புட்டு அழுக.....(நம்ம சோக்ஸா இருக்கும்போதுதான் இந்த பாட்டுலாம் போடுவாய்ங்க...)😩😩😩😩
அடுத்த நாள் காலேஜ் கோயமுத்தூர்-ல சேர்ந்தாச்சு...😤😲
வாழ்க்கைல எவ்வளவோ விஷயம் எத்தன தடவ நடந்தாலும் ,முதல் முறைங்கிறது...மறக்கவே முடியாதது...(எங்க சொல்லுனுலாம் கேக்காதிங்க)...😷😕😔
முதன் முதலா....விடுதி..... Girls hostel...😰😰😰😰
அழுதுக்கிட்டே...நா நம்ம ஊர்ல இருக்க arts college லயே சேந்துக்கிறேன்.என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுமானு..சின்னப்புள்ள மாறி ...அம்மாவோட  முந்தானைய புடிச்சுட்டு விடல....(ஹாஸ்டல் சேந்ததுக்குலாம் இவ்ளோ சீனா-னுதானே தோணுது....i am லாம் 90'ஸ் kid...Scl லாம் கூட வீட்ல இருந்துதான் போனேன்...ஹா ஹா.........)🙋🙋😿😿
ராட்சசி...அப்டிதான் பினாத்துவானு .....எங்கம்மா சொல்லிட்டு வீட்டுக்கு போய் அழுதுருக்கு...(இதுக்கு கூட்டிட்டே போயிருக்கலாமா...அழுத விஷ்யத்தையும் அப்டியே மறைச்சுட்டாய்ங்க அப்ரசண்டிங்க...)🙇🕴
கடல்...கடல் ...மறந்தாச்சு பாத்திங்களா....(பின்னாடி பாப்போம்..)👶👶
கோயமுத்தூர்லயும் சிறுவானிதான்...(அட..இந்த புள்ள வேற...)🕵
4 years completed....🙊🙉🙈
What next....
எல்லாரும் என்ன என்னமோ நினைக்க...அக்கா கரீட்டா....சித்தாக்கு அப்ளிக்கேஷன் போட்டு....counselling நாளைக்குனா...இன்னைகுதாம் வீட்லயே சொல்றோம்ல...(அடி..படுகாலிங்கிறீங்களா....அப்டிதான் எங்கம்மாவும் சொல்லுச்சு....)🙆💁
இந்த முறையும் counselling முடிச்ச கையோட, ஊருக்கு வந்தாச்சு....(தாய்....)🏃🚶
2015...
அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி-திருநெல்வேலி...
🙋👰
GCTian becomes GSMCian....(த்தூ ..மேட்ட்ருக்கு வா...)💁
நா வந்தப்ப இங்க நல்ல குளிரு...அப்டியே அந்த காலேஜ்ல வச்சிருந்த sweater,குரங்கு குல்லாலாம்...வேற மாட்டிட்டு...sceneஆ இருந்துச்சு..(வெயில பத்தி தெரில இந்த குட்டிக்கு தெரியலனு சீனியர்ஸ் சிரிச்ச விஷமம் இப்பதான் புரியுது கருமம்....
)🙇🙇
புள்ள படிச்சா அந்த ஊர்க்கு mini tour போகுமே...அந்த கும்ப்ளிங்கே தான்...👪👪👭👬
வீட்ல இருக்கவங்கலாம் வந்து....👪
எஸ்ஸ்.....
கன்னியாகுமரி...💕💃(வெற்றிக்குறி போட்டுக்கோங்க...)💪
இன்னும் கொஞ்சம் பில்டப் பண்ணுனா...🌏
இந்திய பெருங்கடல்.....(எப்டி...😂💕💃)
6ங் கிளாஸ்ல கடல பாக்கும்போது இருந்த அதே பீலிங்க்தான்....🏖
ம்மா...இந்த தண்ணிலாம் எங்கம்மா போகுது....
விட்ரீ..எங்கயோ போய்டு போகுது...என்றார் தாய்...அந்த ரெண்டு ப்ளேஸ்க்கும் போட்-ல போய்ட்டு வந்தாச்சு...🏖
அப்ப .....புடிச்சது ,இந்த  சங்கு சிப்பி கடல் பயித்தியம்....🏝🏝🏝
எங்க போலானு கேட்டா....கடல் பாக்க போலாம்....(நல்ல வேல திஸ் ஊரு ஹேஸ் மெனி கடல்ஸ்....)😘💙💃
நமக்கு ஒன்னு தெரிஞ்சுட்டா ,பெரிய...ம... மாதிரி சொல்லுவோம்ல...அப்டி சொல்லி...18 வயசு முடியிறதுக்குள்ள கடல பாருன்னு சொல்லி...கூட்டிட்டு போனது  திருச்செந்தூர்க்கு...ப்ரசன்யாவ...😎
(அவளும் மேகமா...வானமா...என்று சேம் பினாத்தல்...)...
(U remember this dialogue..., இந்த நாய் இந்த நாய்க்கூடதான் சேந்தாகனும்ங்கிறது விதி..)😂
மீண்டும்.....மீண்டும்....
கடல் பெரும் ஆறுதல்....
அதுக்கப்றம் எந்த ப்ரச்சனனாலும்...கடல போய் பாக்கலாம்...
எவ்ளோ....ஆராவாரத்துலயும் அமைதியா இருக்க மாதிரி தோணும்...
மனசு எவ்ளோ கஷ்டம்னாலும் லைட் ஆகிறும்....(ஒரு கப் ஃகாபி் ப்ளீஸ்....)
💕💗

















Saturday 6 April 2019

சனிக்கிழமைகள்...



சனிக்கிழமை என்றாலே....மேம்ம்ம்ம்ம்...இன்னைக்கு sattturdayyyy என்றும் குழையும் தொனியில் சொல்லும் ஜோதிகாதான் நினைவில் வருவார்...


அந்த படத்திற்கு பின் காதலர்களுக்கு சனிக்கிழமை இரவு என்று சொல்வதே....ஒரு கிலுகிலுப்பாக இருக்கிறது...😍


வெள்ளிக்கிழமைகளின் அந்தி பொழுதுபோல் எதுவும் அவ்வளவு ஆசுவாசத்தை தந்ததில்லை...
எவ்வித மன அழுத்தமும் இன்றி "ஹப்பாடா"  என்று அமரலாம்...(ஏனென்றால் ...நான் இன்னும் student தான்ப்பு...)😂


என்னுடைய சனிக்கிழமைகள்...ஒரு தூங்கும் நாள்...
நாள் முழுக்க கூட தூங்கியிருக்கிறேன்...(வேற என்னத்த கழட்டிட போற...)...
(No Saturday night palsy/party....)


வார இறுதிகளில் விடுதியே மிகவும் அமைதியாக இருக்கும்...(இந்த பக்கத்துல நாகர்கோவில் கோவில்பட்டி ticketலாம் வீட்டுக்கு போய்டும். ஹை
......மெஸ்லையும் கொஞ்ச பேருக்கு சோறு சமைக்கும் போது இன்னும் கொஞ்சம் நல்லார்க்கும்...).


பொதுவாக  மாடசாமி மெஸ்ல காலை- பொங்கல்....என் விருப்பான உணவுகளில் இதுவும் ஒன்னு...(திங்கிறதுல எதுதான் உனக்கு புடிக்காது...ஹ்ம்னு லாம் கேக்காதிங்க....foodie Na...haa haa)


சாப்பிட்டு வந்து மல்லாக்க படுப்பதோடு சரி...அடுத்து மதியம் மீன் குழம்புக்குதான் ...
தூக்கத்திலிருந்து எழுவதே ஒரு பெரும் சோம்பேறித்தனம்...ஆனா மீன்குழம்பு...ஒரு உற்சாகத்தோட,எதோ பெருசா சாதிக்க போற மாதிரி எழுந்துருவேன்...

மெஸ்க்குள்ள என்ரி ஆகும்போதே வாசனை புடிச்சுக்கிட்டு...

சாப்பாடு போட்டு கொஞ்சமா பிசைஞ்சு விட்டுட்டு கொஞ்சம் குழியாக்கி....அதுல அப்டியே.......மீமீன்ன்ன்ன்ன் உடையாம தட்டுல எடுத்து போட்டு.. .ஒரு fish fry( சரி...ரெண்டு...) வாங்கிட்டு......அப்டியே ஒவ்வொரு வாயா சாப்பிட ஆரம்பிச்சா...
நாக்குல இருக்குற சுவை அரும்புகள் அத்துணையும் அழகா முழிச்சு ஒவ்வொரு சுவையும் ....ஆஹான்னு உள்ள போய்.....வாழ்க்கைல வேறென்ன சுவை இருக்க போகுதுனு முடியும்....



சாப்பிட்டதும் திருப்பி ஒருக்கா தூங்கி  சாய்ந்தரமா 5.30 மணி போல எழுந்திரிச்சு டோழி கூட எங்க போகனும்னே தெரியாம....போய்ட்டு சும்மா ஊரச் சுத்திட்டு தின்னுட்டு வந்துடுறது...(டோழியும் நாள் முழுக்க தூங்குறதுனு cooperate பண்ணுவாங்க)...


இரவு முழுக்க ☀️ பகலாய் போகும்....அது இது வரையிறேன் கழட்ட்றேன்னு...முடிச்சுட்டு நம்மளே நல்லார்க்குனு திருப்தி படுத்திட்டு தண்ணீர் குடிச்சுட்டு தூங்க வேண்டிதான்...(வேறென்ன வேல....)...

Wednesday 20 February 2019

மை பேனா....✒😍😘



பேனாவென்றால்  அவளின் நீள் விருப்பம்...
யார் வைத்திருந்தாலும் கூச்சமே இல்லாமல் வாங்கி எழுதிப்பார்த்து விட்டுதான் தருவாள்...இல்லையென்றால் உங்கள் நியாபகமாக வைத்துக்கொள்கிறேன் என்று தனதாக்கி கொள்வாள்...(பயித்தியம்....அப்டினுலாம்.....நோ....ஷ் ஷ்.....😂)

ஈஈஈஈஈ...அந்த அவள்...வேறாருமில்லை...நாதான்...😋

சிலேட்டு குச்சி,காயித குச்சில இருந்து promotion கிடைச்சது.....இன்க் பேனா...ஹப்பாடா நாமளும் பெரிய புள்ளையாகிட்டோம்..(ஒவ்வொரு கட்டத்துலையும் எதோ ஒன்னு நமக்கு பெரிய புள்ளையாகிட்டோம்ங்கிற உணர்வ உண்டாக்கும்....அதுல ஒன்னுதான் இந்த பேனாவும்..).💃💃💃📝✏

இன்க் பாட்டில்-லாம் வீட்ல இருக்காது...
தாத்தா கடைல வரிசைல நின்னு இன்க் ஊத்தனும்...🙋💁
அரை பேனா நிரப்ப 25 காசு..முழு பேனா நிரப்ப 50 காசு..🙄
புது பேனா வாங்குனா ink free...(வீட்ல குடுக்கிற 1 ரூவால பாதி அதுக்கே போய்டும்..)🙁
(சில்றையா குடுத்தா...தப்பிச்ச...இல்லனா மீதிக்கும் சில்ற இல்லனு எதோ முட்டாய் குடுத்து விட்டுருவாரு அந்த வெள்ள மீசை)😏

Ink சுதி சுத்தமா ஊத்துறது எவ்ளோ பெரிய டாஸ்க் தெரியுமா...ஊத்திப்பார்....
....(கண நேர கவனச்சிதறலும்  கததான் அப்றம்..)💯

...

நிப்-ஆ  அ அ ஆ அப்டி பதுசா கீறி விடுறது...🎶

இன்க் ஒழுகிட்டுனா...
அச்சோ! கிச்சோலாம் இல்ல...தலைல தேச்சுட்டு அசால்ட்டா நகந்துருவோம்.....😎

சொட்டு சொட்டா கடன் வாங்குறது..குடுக்கிறது....நாம உறிஞ்சனும்-னு நினைக்கிறதுக்குள்ள பேப்பர் உறிஞ்சுறும்....எல்லாம் விதி!!!! அடுத்த பக்கம் இருக்க புள்ளைய பாக்கனும்....அது என் கிட்டையே கொஞ்சம் தான் இருக்குனு பஞ்ச பாட்டு பாடும்....நாம கெஞ்சனும் வேற...🤗🤗😅

ஒவ்வொரு முழாண்டு பரிட்சை முடிஞ்சதும்....இங்க் அடிச்ச சட்டையோட தான் வீட்டுக்கு போனும்....(இல்லனா பரிச்சைல பெயில்தாண்டி மவனே....)😅😅😅

வகை வகையான பேனாக்கள்...😻😻

5 ரூவா பேனா..
கண்ணாடி பேனா..
கலர் கலர் பேனா...
குண்டு காம்லின் பேனா...😻
குச்சி காம்லின் பேனா...


இதலாம் கடந்ததான் அந்த hero பேனா....(பணக்கார பேனானுலாம் நினைச்சதுண்டு)...
🕵🕵

அந்த பள்ளிக்காலத்தில் பால் பாய்ண்ட் பேனாவென்றால் ஆசையாக இருக்கும்...🙆

பன்னாடாங்க் கிளாஸ் பப்ளிக் பரிட்சையோட இங்க் பேனாவின் அத்தியாயமே முடிந்திருக்கும் நம்மில் பலருக்கு...🙆🙆🙆

பிறகு....கல்லூரி...
இங்க நோட் வச்சுருக்கிறதே பெரிய விஷ்யம்...இதுல பேனா வேறவாக்கும்..💆💆

இங்க் ஊத்துற பேனாலாம்...ஜோல்னா பை...காட்டன் வேஸ்டி...குர்த்தா....எண்ணெய வச்சு  வகிடு எடுத்த தலை...இந்த வரிசைலதான் இருக்கும்னு நினைப்பு வேற...(அராத்து சாரு போன்றோர்களையெல்லாம் யான் அறியவில்லை பராபரமே)..🙇🙇🙇

மீண்டும்....அடுத்து ஒரு கல்லூரி....
இங்குள்ள சிறுவர்கள் இங்க் பேனாவில்தான் record நோட் எழுதினார்கள்...🚶🚶🚶
நான் ball point பேனாவில் எழுதி புரட்சி செய்துவிடலாமென்றெல்லாம் எண்ணியதுண்டு...(ச்சிரிக்காதலே)....🏃🏃🏃🏃


அன்னைக்கும் வழக்கம் போல பேனா எடுத்துட்டு போல...ஆனா எழுத சொல்றாங்க...(நோட்டாவது எடுத்து போனியானு கேக்றிங்களா...அதலாம்....ம்ம்ம் ம்ம்ம்ம்...பக்கத்து புள்ளைட்ட நடுப்பக்க பால் பேப்பர் கடன் வாங்கியாச்சுல...)
👭👭
ரோகிணி பேனா குடுத்தா....ம்ம்ம்ம்..புளு கலர் பார்க்கர் பேனா...😍எழுத்து வழுக்கிட்டு போது....அழகா நகருது ஒவ்வொரு நகர்வும்...எதற்கும் பாரமில்லாமல்.....
அன்றிலிருந்தே அதன் மேல் ஒரு ஈர்ப்பு...(திருடலலாம் இல்ல...🙄)✌

நமக்கு புடிச்சவங்க என்ன பண்ணாலும் நம்மல அறியாமலே அந்த பழக்கம் நம்மள ஒட்டிக்கும்..அந்த சாரும் இன் க் பேனாதாம் பயன்படுத்துவாரு....👍👍✌

நானும் அந்த பேனாவை அடிக்கடி பார்ப்பதுண்டு...
அதன் விலை கேட்பதோடு சரி..அதுக்கு நல்லா சாப்பிட்டுகலானு வந்துருவேன்...👯👯

உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டால் புத்தகத்திற்கு அடுத்த இடம் பேனாவிற்குதான்...🙈😻

சாப்டலானுதான் போனேன்...
பேனா வாங்கிட்டு வந்துட்டேன்...😄😄😄

முதல் மை அரங்கேற்றம்..
அவன் தான் ஆடுகிறான்....🐾🐾
மை நிரப்பி
மையல் வரைகிறேன்...




பேனா .....அவளின் நீள் விருப்பம்.....🖋🖋🖋

இப்படிக்கு...
அன்றைய நாளின் பேனா விஞ்ஞானி....









Saturday 16 February 2019

சுய காதல்💗

சுய- நலம்...(சுயத்தை போற்றுதல்)...(self care is not selfish) என்பதை சொல்லிக்கொண்டு....




நமக்காக மட்டும் (ப்ரண்டு, ட்ரீட் ,ஓசி சோறு, நாலஞ்சு பேரு...அப்டினுலாம் இல்லாம)..
ஒரு சாய்ந்தரம் வாக்குல ,காத்தாட நடந்து போய்...
நாலு டேபிள் ,கொஞ்சம் இதமான லைட்டிங்க்ஸ்,ஓரளவுக்கு அமைதியான சூழல்-ல,நமக்கு புடிச்சத நம்ம காசுல (சரி...தம்பி குடுத்தான்)வாங்கி...

அது வர வரைக்கும்,அதோட சுவைக்கு ஏத்தமாரி😋 ,என்சைமலாம் ரெடி பண்ணிட்டு💯,நம்ம மொபைல்-ல நமக்கு புடிச்ச பாட்டு போட்டு🎶🎼🎵 ,நமக்கு மட்டும் கேக்றாப்டி வச்சுட்டு(very important),
சிங்கிளா 🙋...பக்கத்து சேர்லையும் கால வச்சு வசதியா உக்காந்திருக்கும்போது,...அப்டியே சூடா நம்ம ஆர்டர் பண்ணது வரும்......💁💁
வாரே வானு....அப்டியே...கொஞ்சம் பீஸ்-அ மயோனைஸ்ல டிப் பண்ணி கொஞ்சம் அந்த சாலட் வச்சு சாப்டும் போது...😍சொர்கம் சார் அது...💃💃💃

நமக்கு வேணுங்கிறத நம்மதான் கேக்கணும்..(extra salad,extra mayonnaise போன்றவைகள்)...
நம்ம சாப்டுறத பாத்தா செர்வ் பண்றவங்களுக்கே சாப்டனும்னு தோனனும்..✌

கடைசி பீஸ்க்கு இன்னும்.. கொஞ்சம்... கொஞ்சமா,மயோனைஸ் வாங்கி சாப்ட்டுட்டு...மீதி இருந்த வெங்காயம் எலுமிச்சைல plating பண்ணிட்டு ,லைட்டா தண்ணி இறக்கிட்டு நடந்து வந்தாலும் நல்லாதான் இருக்கும்ல...✋👐💗💖
(Self love....)

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...