Friday 3 May 2019

புதிய எழுத்தாளர்களுக்காக 🎵

புதிய எழுத்தாளர்களுக்காக 🎵 -
சுஜாதா பேசுகிறார்..

1.என் எழுத்து நடையை பின்பற்றாதீர்கள்.இதை parody செய்வதுபோல் ஆகிவிடும்.அது உங்களுக்குள் ஒலிக்க வேண்டும்.

2.முழுக்க முழுக்க கற்பனையான எழுத்தில் எழுத முடியாது.நான் பார்த்த,கேட்ட,பங்குபெற்ற சம்பவங்களை அப்படியே எழுதாமல் பெயர்,இடம்,காலம் இவைகளை மாற்றி மற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் உரையாடல்களையும் கலந்து எழுதுகிறேன்.இந்த முறைதான் என் வெற்றிக்குக் காரணம்.

3.நிறைய ,மிக நிறையப் படிக்க வேண்டும்.கதை எழுதுவதற்கு மட்டுமின்றி சில கதைகளை எழுதாமலிருப்பதற்கும் அது உதவும்.

4.பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.அது நம் மரபு மட்டுமன்றி இந்த மொழியின் பல்வேறு வாய்ப்புகளை நமக்கு காட்டும். நல்ல தமிழ் எழுதப் பழகுவது நல்ல பேனாவை நல்ல தூரிகையை வைத்துக்கொண்டு சித்திரம் வரைவது போல்.

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...