Friday 3 May 2019

சுஜாதா - எழுத்தின்பம்...





நிறைய தமிழ் படங்கள் சின்ன வயசுல பாத்தது...(90s kid-ல)

காலேஜ் வந்ததுகப்றம் கொஞ்சம் பாட புத்தகம் தாண்டி வாசிக்க ,சின்ன புள்ளைல பார்த்த படங்கள எல்லாம் திருப்பி பார்க்க ஆரம்பிச்சக்காலம்.
சுஜாதாவும்,வைரமுத்துவுதான் முதல வாசிச்சேன்..

Straightஆ directed by தாண்டிதான் படம் பத்து பழக்கம்..
அன்னைக்கும் அப்டிதான்.
கண்ணத்தில் முத்தமிட்டால் ...
பாதி போகுறதுக்குள்ளவே...இதுமாதிரி நாம எங்கயோ அனுபவ பட்ருக்கமே....சுஜாதவா இருக்குமோனு பார்த்தா.. Yes...அவரேதான்...
Dialogue by-சுஜாதா...
அப்றம் இன்னும் ஆர்வமா சுஜாதவ வாசிக்க ஆரம்பிச்சுட்டேன்...


அடிப்படை நன்றாக இருந்தால் அனைத்தும் சிறப்பாக அமையும்..
அப்படிதான் வாசிப்பும்..
எனதடிப்படை வாசிப்பு சுஜாதாதான்..
கதைகளில் புது நோக்கு...
அதிக அறிவியல் புணைவு கதைகள்...
எதாவது ஒரு புது விஷ்யங்கள் தெரிஞ்சுக்கலாம்...
அதிக வழ வழ கொழ கொழன்னு இல்லாம இருக்கிறது தனி சிறப்பு..


இவரின் கதைகளில் எதிர்பாரத திருப்பங்கள்  மிகவும் எதிர்பார்ப்பாக இருக்கும்...
வாசிக்க மிக சுலபமாக இருக்கும்...
வித்தியாசமான கதைக் களங்களில் புகுந்து விளையாடியவர்..ஆங்கில வார்த்தைகளும்,அறிவியலும் அதிகம் ஈம்ர்க்கும்...
எழுத்தின் வழி இன்பம் காண விளைபவர்களுக்கு சுஜாதாவின் படைப்புகள் நிச்சயம் நல்ல விருந்துதான்...
வாசித்து இன்புறுவோம்...


#பிறந்தநாள்_வாழ்த்துகள்_சுஜாதா

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...