Saturday 6 April 2019

சனிக்கிழமைகள்...



சனிக்கிழமை என்றாலே....மேம்ம்ம்ம்ம்...இன்னைக்கு sattturdayyyy என்றும் குழையும் தொனியில் சொல்லும் ஜோதிகாதான் நினைவில் வருவார்...


அந்த படத்திற்கு பின் காதலர்களுக்கு சனிக்கிழமை இரவு என்று சொல்வதே....ஒரு கிலுகிலுப்பாக இருக்கிறது...😍


வெள்ளிக்கிழமைகளின் அந்தி பொழுதுபோல் எதுவும் அவ்வளவு ஆசுவாசத்தை தந்ததில்லை...
எவ்வித மன அழுத்தமும் இன்றி "ஹப்பாடா"  என்று அமரலாம்...(ஏனென்றால் ...நான் இன்னும் student தான்ப்பு...)😂


என்னுடைய சனிக்கிழமைகள்...ஒரு தூங்கும் நாள்...
நாள் முழுக்க கூட தூங்கியிருக்கிறேன்...(வேற என்னத்த கழட்டிட போற...)...
(No Saturday night palsy/party....)


வார இறுதிகளில் விடுதியே மிகவும் அமைதியாக இருக்கும்...(இந்த பக்கத்துல நாகர்கோவில் கோவில்பட்டி ticketலாம் வீட்டுக்கு போய்டும். ஹை
......மெஸ்லையும் கொஞ்ச பேருக்கு சோறு சமைக்கும் போது இன்னும் கொஞ்சம் நல்லார்க்கும்...).


பொதுவாக  மாடசாமி மெஸ்ல காலை- பொங்கல்....என் விருப்பான உணவுகளில் இதுவும் ஒன்னு...(திங்கிறதுல எதுதான் உனக்கு புடிக்காது...ஹ்ம்னு லாம் கேக்காதிங்க....foodie Na...haa haa)


சாப்பிட்டு வந்து மல்லாக்க படுப்பதோடு சரி...அடுத்து மதியம் மீன் குழம்புக்குதான் ...
தூக்கத்திலிருந்து எழுவதே ஒரு பெரும் சோம்பேறித்தனம்...ஆனா மீன்குழம்பு...ஒரு உற்சாகத்தோட,எதோ பெருசா சாதிக்க போற மாதிரி எழுந்துருவேன்...

மெஸ்க்குள்ள என்ரி ஆகும்போதே வாசனை புடிச்சுக்கிட்டு...

சாப்பாடு போட்டு கொஞ்சமா பிசைஞ்சு விட்டுட்டு கொஞ்சம் குழியாக்கி....அதுல அப்டியே.......மீமீன்ன்ன்ன்ன் உடையாம தட்டுல எடுத்து போட்டு.. .ஒரு fish fry( சரி...ரெண்டு...) வாங்கிட்டு......அப்டியே ஒவ்வொரு வாயா சாப்பிட ஆரம்பிச்சா...
நாக்குல இருக்குற சுவை அரும்புகள் அத்துணையும் அழகா முழிச்சு ஒவ்வொரு சுவையும் ....ஆஹான்னு உள்ள போய்.....வாழ்க்கைல வேறென்ன சுவை இருக்க போகுதுனு முடியும்....



சாப்பிட்டதும் திருப்பி ஒருக்கா தூங்கி  சாய்ந்தரமா 5.30 மணி போல எழுந்திரிச்சு டோழி கூட எங்க போகனும்னே தெரியாம....போய்ட்டு சும்மா ஊரச் சுத்திட்டு தின்னுட்டு வந்துடுறது...(டோழியும் நாள் முழுக்க தூங்குறதுனு cooperate பண்ணுவாங்க)...


இரவு முழுக்க ☀️ பகலாய் போகும்....அது இது வரையிறேன் கழட்ட்றேன்னு...முடிச்சுட்டு நம்மளே நல்லார்க்குனு திருப்தி படுத்திட்டு தண்ணீர் குடிச்சுட்டு தூங்க வேண்டிதான்...(வேறென்ன வேல....)...

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...