விக்கிதான் அடிக்கடி சொல்லிட்ருப்பான்...பிரமிள் கவிதைகள் புக்கு வாங்கி குடுடி-னு...
நானும் கொஞ்சம் விசாரிச்சேன் கிடைக்கல...
த.ராஜனோட,ஏன் பிரமிளை வாசிக்கவேண்டும் கட்டுரை வாசிச்சேன்...
கண்டிப்பா வாசிக்க வேண்டிய மனுசன் இவருனு கொஞ்சம் தீவிரமா தேடுனதுல
எப்டியோ e-book கிடைச்சிருச்சு...
அது ஒரு முழு தொகுப்பு இல்ல...சில தொகுப்புல இருந்த கவிதைகள்-ல சில பல கவிதைகளை தொகுத்து வச்சதுதான்...
வார இறுதி நாள் சாய்ந்தரம்னாலே சவகாசம்தான்..
நல்லா தூங்கி எழுந்து ,
தலை குளிச்சிட்டு,
ஈரம் முழுசா உலராத தலையோட,
தளர்வா டிரெஸ் போட்டுகிட்டு,
சூடான ஒரு கப் டீ,
கொஞ்சம் தின்பண்டம்லாம் வச்சுக்கிட்டு...
வாசிக்கலானு தொடங்கியாச்சு...
நான் என்னனேய தேடிச் செல்கிறேன் .
இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான்
நடந்து செல்லும் பாதை கவிதையினுைடயது - பிரமிள்
(தட் முதல் பக்கமே impressive).
இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான்
நடந்து செல்லும் பாதை கவிதையினுைடயது - பிரமிள்
(தட் முதல் பக்கமே impressive).
ஒவ்வொரு கவிதையும் முடியும் போது,அவ்வளவு ஒன்றிப்போய் நகராம மனசுக்குள்ளயே பதிஞ்சிருச்சு...
மனுசன காதலிக்கவே ஆரம்பிச்சுட்டேன்...
நீங்களும் வாசிங்களேன்...
மனுசன காதலிக்கவே ஆரம்பிச்சுட்டேன்...
நீங்களும் வாசிங்களேன்...
ரஸவாதம் - பிரமிள்
இதயத்தில் உன் மறுப்பின்
வேல் புைதந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முைல சுரந்தாள்
சொரந்ததுேவா
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.
வேல் புைதந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முைல சுரந்தாள்
சொரந்ததுேவா
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..
No comments:
Post a Comment