திருநெல்வேலி --) ஏர்வாடி --)திருக்குறுங்குடி.....
ண்ணா...! திருக்குறுங்குடிக்கு மூணு டிக்கெட்...
நோகாமா போய் இறங்கியாச்சு...அப்டியே மே .தொ.மலைய நோக்கி நடக்க ஆரம்பிச்சாச்சு..
இடம்:திருக்குறுங்குடி வீதி.. கதாபாத்திரம்:நாங்க மூனு பேரு.அந்த குழந்தை.. நேரம்:9.அஞ்சு இருக்கும்..
போற வழில ஒளிஞ்சி சிரிக்குக்கிட்டே டாட்டா காட்டுன அந்த குழந்தை தேவதை அவ்வளவு அழகு...(உம்ம்ம்ம்ம்மா புள்ள)
மரம் செடி கொடிலாம் முழுக்க பச்சை போர்வை போத்தியிருந்துச்சு..(தலகாணி வைக்கலையானுலாம் கேட்றாதிங்க...)
வட்டகுளம் வரவேற்கிறது.....
எஸ்.....பெரிய வட்டகுளம்...
குட்டி குட்டியா அலை அடிட்டுக்கிட்டே நம்ம கால தொடும்பொது நிச்சயம் மனசு குளிந்து போகும்...(குளம் எப்டி அலை அடிக்கும்னு அறிவாளி தனமா யோசிக்கப்பிடாது....அதல்லாம் அடிக்கும்....)
மலையோட அழக ரசிச்சுக்கிட்டே நடந்தோம்.....
போற வழில உள்ள மக்கள்-லாம் அவ்ளோ அன்பா வழி நடத்துனாங்க...சாரி..வழி சொன்னாங்க....
அவ்வளவு மூலிகை செடி அங்க...மருத்துவமே தேவை இல்லை ..அந்த செடிங்க வாசைனைல வாழ்ந்தாலே போதும்.. நோயே வராது...
அங்க மலை நெல்லிக்கா மரந்தான் அதிகம்..திருடி திங்கிறதுக்கு சுவையே தனி..இத ஏன் இந்த புள்ள இங்க சொல்லுதுனு எப்டியும் யோசிச்சிருப்பிங்க......(திருடி திங்கிறதுக்கு இப்டி ஒரு பிட்டா...அதானே.....இட்ஸ் ஓ.கே..நோ துப்பல்ஸ் ஹான்.....)
அங்க அங்க ஓடுற ஓடை....மிதமான இதவெயில்...அழகா மேனி பூசுற குளிந்த காற்று...மேற்கு தொடர்ச்சி மலை...நடக்குறதுக்கு அழகான வெளி-ன்னு அஞ்சு பூதமும் முத்தமிட்டுக்கிட்டே அரவணைச்சது..(அப்டி ஒரு climate)
அங்க அங்க ஓடுற ஓடை தான் ஸ்பெஷல் அழகு...அதுல கிடக்குற குட்டி பாறையும் குட்டி குட்டி கல்லும்தான் extra அழகு...(ம்ம்ம்ம்..தண்ணி செம taste-u)
அப்டியே வேடிக்க பாத்துக்கிட்டே காட்டு வழிக்கு வந்தாச்சு..(எஸ்....4 கி.மீ ஓவர்)
இடம்:காட்டு வழி கதாபத்திரங்கள்;மூன்று அழகிகள்..ச்சரி விடுங்க...மூனு பொண்ணுங்க.. நேரம்:அதலாம் தெர்லப்பா...
வனம்-னாலே இயற்கை கொஞ்சம் நஞ்சம் உயிரோட இருக்க இடம்..இங்கையும் இப்டிதான்...
Entry.....
புகைப்படம் எடுக்க அனுமதியில்லை...board....(க்ளிக்கியாச்சு)...
தண்ணி குடிச்சு,குடிச்சு...நடக்க நடக்க...இன்னும் இன்னும் தூரம் பா
தீரன் மூவி டயலாக்தான்...
கித்னா கி.மீ பையா... தோ கி.மீ .கணக்குதான்.....
ஒரு வழியா அப்டி இப்டினு கோயில பாத்தாச்சு(ஓ.....நீங்க கோயிலுக்குதான் வந்திங்களா........ ச்ச ச்ச)
அங்க நோ கடை..நோ சsnacks...only water....
அன்னதானத்த அடிச்சு புடிச்சு வாங்கி வயித்துக்கு வழி சொல்லியாச்சு...(ஹப்பாடா....TASK COMPLETED...)
ச்சரி போகும் போது ஜீப்-ல போய்ருலாம்னு போய் கேட்டா அந்தண்ணே 1000-ரூவாங்குது...மலையும் இடமும் நல்லருக்குண்ணேன்னு நடந்தே போய்டுறோம்னு வந்தாச்சு...
Finally what is the moral of the story-னா
கோயிலோ மலைக்குள்ள இருக்கு...மலையோ காடோ அது விலங்குகளோட வீடு தான்...அங்க போய்ட்டு மனுச மிருகம் விலங்குகள அடிக்கிறது,துன்புறுத்துறதுனும் இல்லாம மூடிக்கிட்டும் வரலாம்....அவ்வளவுதான்...
200ரூபாக்குள்ளதான் செலவாகும்...காட்டு வழி மலைல நடந்து போறது நல்ல அனுபவமா இருக்கும்...முடிந்தால் போய் மேற்கு தொடர்ச்சி மலையின் குட்டி பகுதியை கொஞ்சி வாருங்கள்.......<3