Sunday 31 December 2017

மேற்கு தொடர்ச்சி மலையும் ...நாங்களும்..

      திருக்குறுங்குடி (எங்கடா மே.தொ.மலைனுலாம் சொன்னானு பார்க்கப்பிடாது...வரும்...இனிதான்)



திருநெல்வேலி  --) ஏர்வாடி --)திருக்குறுங்குடி.....


ண்ணா...! திருக்குறுங்குடிக்கு மூணு டிக்கெட்...
  நோகாமா போய் இறங்கியாச்சு...அப்டியே மே  .தொ.மலைய  நோக்கி நடக்க ஆரம்பிச்சாச்சு..
இடம்:திருக்குறுங்குடி வீதி.. கதாபாத்திரம்:நாங்க மூனு பேரு.அந்த குழந்தை.. நேரம்:9.அஞ்சு இருக்கும்..
போற வழில ஒளிஞ்சி சிரிக்குக்கிட்டே டாட்டா காட்டுன அந்த குழந்தை தேவதை அவ்வளவு அழகு...(உம்ம்ம்ம்ம்மா புள்ள)

            இயற்கையோட ததும்புற வாழ்க்கை முறைதான் அங்க...( நம்ம இந்த ஊரா இருந்துருக்கக் கூடாதங்கிற மொமெண்ட்)
மரம் செடி கொடிலாம் முழுக்க பச்சை போர்வை போத்தியிருந்துச்சு..(தலகாணி வைக்கலையானுலாம் கேட்றாதிங்க...)

நாலஞ்ச்சு மூலிகை செடியோட பேர கதைச்சுக்கிட்டே நடை பயணம் தொடந்தது...(8 கி.மீ நடக்கனும்-நு நினைக்கும்போதுதான்  நாக்கு தள்ளுது...நடந்துருவோம்)...

வட்டகுளம் வரவேற்கிறது.....



         எஸ்.....பெரிய வட்டகுளம்...
குட்டி குட்டியா அலை அடிட்டுக்கிட்டே நம்ம கால தொடும்பொது நிச்சயம் மனசு குளிந்து போகும்...(குளம் எப்டி அலை அடிக்கும்னு அறிவாளி தனமா யோசிக்கப்பிடாது....அதல்லாம் அடிக்கும்....)

மலையோட அழக ரசிச்சுக்கிட்டே நடந்தோம்.....

போற வழில உள்ள மக்கள்-லாம் அவ்ளோ அன்பா வழி நடத்துனாங்க...சாரி..வழி சொன்னாங்க....

அவ்வளவு மூலிகை செடி அங்க...மருத்துவமே தேவை இல்லை ..அந்த செடிங்க வாசைனைல வாழ்ந்தாலே போதும்.. நோயே வராது...

அங்க மலை நெல்லிக்கா மரந்தான் அதிகம்..திருடி திங்கிறதுக்கு சுவையே தனி..இத ஏன் இந்த புள்ள இங்க சொல்லுதுனு எப்டியும் யோசிச்சிருப்பிங்க......(திருடி திங்கிறதுக்கு இப்டி ஒரு பிட்டா...அதானே.....இட்ஸ் ஓ.கே..நோ துப்பல்ஸ் ஹான்.....)




அங்க அங்க ஓடுற ஓடை....மிதமான இதவெயில்...அழகா மேனி பூசுற குளிந்த காற்று...மேற்கு தொடர்ச்சி மலை...நடக்குறதுக்கு அழகான வெளி-ன்னு அஞ்சு பூதமும் முத்தமிட்டுக்கிட்டே அரவணைச்சது..(அப்டி ஒரு climate)


அங்க அங்க ஓடுற ஓடை தான் ஸ்பெஷல் அழகு...அதுல கிடக்குற குட்டி பாறையும் குட்டி குட்டி கல்லும்தான் extra அழகு...(ம்ம்ம்ம்..தண்ணி செம taste-u)

அப்டியே வேடிக்க பாத்துக்கிட்டே காட்டு வழிக்கு வந்தாச்சு..(எஸ்....4 கி.மீ ஓவர்)




இடம்:காட்டு வழி கதாபத்திரங்கள்;மூன்று அழகிகள்..ச்சரி விடுங்க...மூனு பொண்ணுங்க..  நேரம்:அதலாம் தெர்லப்பா...

வனம்-னாலே இயற்கை கொஞ்சம் நஞ்சம் உயிரோட இருக்க இடம்..இங்கையும் இப்டிதான்...

Entry.....

புகைப்படம் எடுக்க அனுமதியில்லை...board....(க்ளிக்கியாச்சு)...

பாறை கல்லு மண்ணுனு குட்டி பாதைதான்...


எங்கள roundup பண்ணுன அந்த குரங்கு பாஸ்-அ கண்டிப்பா மறக்க முடியாது....(மறக்கமுடியுமா....வூம்.......)

தண்ணி குடிச்சு,குடிச்சு...நடக்க நடக்க...இன்னும் இன்னும் தூரம் பா

தீரன் மூவி டயலாக்தான்...
கித்னா கி.மீ பையா... தோ கி.மீ .கணக்குதான்.....

ஒரு வழியா அப்டி இப்டினு கோயில பாத்தாச்சு(ஓ.....நீங்க கோயிலுக்குதான் வந்திங்களா........ ச்ச ச்ச)


அங்க நோ கடை..நோ சsnacks...only water....

அன்னதானத்த அடிச்சு புடிச்சு வாங்கி வயித்துக்கு வழி சொல்லியாச்சு...(ஹப்பாடா....TASK COMPLETED...)

ச்சரி போகும் போது ஜீப்-ல போய்ருலாம்னு போய் கேட்டா அந்தண்ணே 1000-ரூவாங்குது...மலையும் இடமும் நல்லருக்குண்ணேன்னு நடந்தே போய்டுறோம்னு வந்தாச்சு...


Finally what is the moral of the story-னா
கோயிலோ மலைக்குள்ள இருக்கு...மலையோ காடோ அது விலங்குகளோட வீடு தான்...அங்க போய்ட்டு மனுச மிருகம் விலங்குகள அடிக்கிறது,துன்புறுத்துறதுனும் இல்லாம மூடிக்கிட்டும் வரலாம்....அவ்வளவுதான்...



  200ரூபாக்குள்ளதான் செலவாகும்...காட்டு வழி மலைல நடந்து போறது நல்ல அனுபவமா இருக்கும்...முடிந்தால் போய் மேற்கு தொடர்ச்சி மலையின் குட்டி பகுதியை கொஞ்சி வாருங்கள்.......<3



     



Sunday 24 December 2017

கிறிஸ்து-மஸ்..

இன்று கிறிஸ்துமஸ் ...

       பொ.மு. வில் உள்ள ஒருவரின் பார்வையில்..
       ‎***கிறிஸ்துவ வரலாறு முழுமையாக தெரிந்தவர் அல்ல...

        கிறிஸ்துவின் பிறந்த நாளை தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம்...
        ‎மக்களின் ஆழமான நம்பிக்கையும் பிடிப்பும் பொருந்தியோ,பொருத்தபட்டோ இருந்தால் மட்டுமே வரலாற்றில் சில விடயங்கள் அழியாமல் இருந்திருக்க முடியும்...
        ‎அப்படிதான் மதங்களும்,கடவுள்களும்...(அரசியல் பேச போவதில்லை...ஆன்மீகமும் இல்லை)....
        ‎மதங்கள் எதுவாகினும்
        ‎போதிப்பது பலவாகினும்
        ‎நம்பிக்கையும் அன்பும் தான் ஊன்று கோள்...
        ‎

         அவ்வாறுதான் கி.மு. கி.பி..(விளக்கம் தாங்களுக்கே தெரியும்)
         ‎இருந்தும்,கிறிஸ்து பிறப்புக்கு முன்,பின்...
         ‎ஆனால் கி.மு-6-லே கிறிஸ்து பிறந்து விட்டார் என்று வரலாறு உள்ளது
         ‎(கிறிஸ்து பிறந்தார் என்றும் வரலாறுதான் சொன்னது)
          B.C-BEFORE CHRIST கிறிஸ்து பிறப்புக்கு பின்..
          ‎A.D- ANNA DOMINI
          ‎ANNA DOMINI என்பது கிறிஸ்து பிறந்த ஆண்டு என்று பொருள்படுமாம்..( நாம் கிறஸ்து பிறந்த ஆண்டிலிருந்து என்று வைத்துக்கொள்வோம்)
          ‎நமக்கு பள்ளிக்கூட வரலாறு A.D -After death என்றும் கற்பித்துள்ளது...
          ‎ஒரு மனிதனின் ..மன்னிக்கவும்..கடவுளின் பிறப்பு மன்னிக்கவும் வாழ்வு எவ்வளவு புனிதமாக இருந்திருந்தால் கி.மு கி.பி வந்திருக்கும்...
          ‎இப்பிரபஞ்சத்தில் வரலாறு,தோற்றம் போன்ற பல கோட்பாடுகள் யூகம்தான்...
          ‎(யார் கண்டார்...யூகம் சில சமயம் உண்மையாகவும் இருக்கலாம்)
           பொதுவாக....பொதுவாக....ஒரு தினம் என்றால் நாம் ஒரு குழந்தை  பிறந்தவுடனையேலாம் பொதுமக்கள் கொண்டாடும் தினமாக ஆகியிருக்காது(அரச குழந்தைகள் கதையெல்லாம் இல்லை)...
           ‎அவர்கள் வாழ்க்கையின் சாரம் உண்மை,நேர்மை,அன்பாக இருந்திருந்தாலோ,வீரராகவோ,மக்களுக்காக உழைத்தவராகவோ அல்லது உயிரிழந்தவர்களாகவோஇருந்தாலொழிய...
           ‎அவர் ,மக்களை நல்வழி நடத்தி,அன்பை போதித்து அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக..நம்பிக்கை நட்சத்திரமாக... ஒளிர்ந்திருக்கலாம்...

          அனைவருக்கும் புரியும் வகையில்,
          ‎    அவர் ஒரு நல்ல அரசியல் தலைவராக விளங்கியிருக்கலாம்..அவர் காலத்தில் நாடும் ,நாட்டு மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக,அமைதியாக வாழ்ந்திருக்கலாம்...      
          ‎மனிதன் கடவுளான கதை(உண்மை) பற்றியெல்லாம் நான் பேசவர வில்லை..
          ‎அன்பை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரிந்தவரை மக்கள் கடவுளாக பாவித்திருக்கலாம்...(TV,fan,laptop,mixer,grinder,gas stove குடுத்தவங்களையே நம்ம கடவுளா பாக்குறோம்...இப்ப cooker குடுத்தாக்கூட)
          ‎christ-mass..mass என்பது இறந்தவர்களுக்காக அனுசரிக்கப்படும் ஒரு அனுசரனை....ஆனால் இந்த விளக்கமெல்லாம் பல்லாயிரம் வருடமாக நம்பி வருவர்களின் நம்பிக்கையை குழைப்பதாகும்..ஏனெனில் விட்டு விடுவோம்...(இல்லையெனில் நேரமிருந்தால் ஆராய்ந்து உண்மையைக் கூறுங்கள்)....
          ‎வரலாற்றை விட நம்பிக்கை முக்கியம்...
          ‎அன்பினை பரிசுகள் மூலமாகவோ,முடியாதவர்கள் முத்தங்கள் மூலமாகவோ பகிர்ந்து கொள்வோம்...

                    MERRY X-MAS...

*****யூகம் சில வேளைகளில் உண்மையாகலாம்...

கொண்டாட மட்டும் அல்ல....

விவசாயிகள் தினம்...
  சில தினங்கள் கொண்டாடவோ,நினைவு கூறவோ,பாதுகாக்கவோ,விழிப்புணர்வு ஏர்படுத்தவோ போன்ற ஏதோவொரு காரணங்களுக்காக அரசாங்கமோ,காலம்காலாமாகவோ ஏற்படுத்தியும் ,ஏற்பட்டும் உள்ளன..
இன்று,அவை அனைத்துமான காரணங்களும் கூடிய நாள்....
‎ஆம்..
‎        விவசாயிகளையும்,விவசாயத்தையும் 'கொண்டாடவும்",
‎         தற்கொலைக்கு ஆளான விவசாயிகளையும்,
‎உணவே மருந்தாக,விவாசாயியே கடவுளாக இருந்த காலம் பற்றி "நினைவு கூறவும்",
‎          அழிந்துக்கொண்டே,நாம் அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் "பாதுகாக்கவும்",
‎            விவசாயத்தை மேம்படுத்த "விழிப்புணர்வு"ஏற்படுத்தவும் தான்..

பல தினங்களில் இதுவும் ஒன்றாக நினைத்துக்கொள்ளாமல், முகப்புத்தகத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றி விட்டதோடு இல்லாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்போம்...

        நாட்டு விதைகளையும்,இயற்கை உரங்களையும் பயன்படுத்தி நலமான விளைச்சலை உருவாக்க அறிவியலை உபயோகிப்போம்..
        ‎
        ‎எருவை உரமாக்கி
        ‎    மண்ணை வளமாக்கி
        ‎          விளைச்சலை பெருக்கி
        ‎                விஷமற்ற உணவை உண்போம்....
        ‎உணவு அமிர்தமாகட்டும்..உடல் உரமாகட்டும்..மனிதம் நிலைக்கட்டும்..
        ‎
        ‎விவசாயம் உயிர் பெறட்டும்...

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...