Sunday 30 August 2020

XS Gallery..

மேடம் ஒரே பிசி....
Yes..
And finally..
இன்னைக்கும் எழுதலாம் போல...(ஹப்பாடா என்று திருப்தியடைவோர் மண்டைலயே ஒரு மொட்டு...).

நாமளும் எதோ கிறுக்கிறோம்...(ஆணவம்லாம் இல்ல குமாரு...)
அத கொஞ்சம் காட்டலாமேனு தான்...

Colours makes life colourful (சாரல் தெரிக்குது..).

அது என்னவோ தெரில ,என்ன மாயமோ புரில..
வண்ணங்கள்...(மேல சொல்லு...)..

Whenever i see colour,colour,co..lo...ur....அது கலரு...அம்புட்டுதான்..
என்னோட

XS Size gallery...






















ஆனால்,வரைதலில் ஒரு நல்ல உணர்வு..தீர்க்கமான ,ஒழுங்கான அமைப்பு என்றெல்லாம் இல்லை..கனவு போல் அழகான ஒரு அமைவு..மகிழ்தலின் போது வாழ்க்கை இன்னும் வண்ணமுறுகிறது..மன அமைதியின் போது மேலும் அர்த்தமுறுகிறது..ஒரு நல்ல காதலன் போல,வரைதலும் அவ்வாறுதான்..உணர்வுகளை வார்த்தைகளின் வழி உரையாடி யார்தான் வெல்வார்..அது ஒரு அமைதியான உணர்வு..நடு வனம் ,ஆழ்கடல் போன்று...

#Corona holidays...
(இன்னும் என்னலாம் செய்ய காத்திருக்கோ..).

Friday 14 August 2020

தாகம்...

காதல் வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்....

அதற்கு ஏதாவது ஒரு வழியை காதலே தேடிக் கொள்ளும்...

சுகம் கொள்ளு(ல்லு)ம்..

பகிர்தலின் வழி உயிர்ப்பு பெற்றுக்கொண்டே இருக்கும்.....

காதலர்கள்தான் தனித்துவமானவர்கள்...

காதல் பொதுவானவைதான்...

அதன் ஆழமும்,உச்சமும்...அனைவருக்கும் ஒன்றுதான்....
அது காதலாய் இருக்கும் பட்சத்தில்....

நான் வாசிப்பவைகளனைத்தும் உங்கள் விழி வழி பாயும் அந்த காதல் ரச வாசனை...நீங்களும் முகர்ந்துக் கொள்ளுங்கள்....

ரூமி கவிதைகள்:

சலிக்கவில்லை நீ எனக்கு...
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப்போகாதே...

நீர்க்குடுவை
நீர்க்கலயம் 
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால்...

தாகங்கொண்ட மீனொன்று 
என்னுள் இருக்கின்றது..
ஒருபோதும்  கூடவில்லை அதற்கு 
முழுத்தாகமும் தணிக்க..

கடலுக்கு வழி எது?
காட்டுங்கள் அதை எனக்கு !
உடைத்தெறியுங்கள் ,
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை..

மனமுயக்கத்தையும் 
பெருந்துக்கத்தையும் கூட

 நெஞ்சின் மையத்தில் 
 யாருமறியா முற்றத்திலிருந்து 
 நேற்று இரவு எழும்பிய அலையில்  
 மூழ்கடிக்கப்படட்டும்
 எனது வீடு.
 
 ஒரு நிலவினை போல
 எனது கிணற்றினுள் விழுந்தார் .
 அடித்து செல்லப்பட்டது 
 நான் காத்திருந்த விளைச்சல் ..
 ஆயினும் 
 அதுவொரு பொருட்டல்ல .


எனது கல்லறையி்ன் மீது
 மூண்டுள்ளது நெருப்பு 
 படிப்பு 
 கௌரவம் 
 அல்லது மரியாதை
  இவை ஏதும் வேண்டாம் எனக்கு 


இந்த இசை 
இந்த புலரி 
உன் கன்னக் கதுப்பு 
எனக்களிக்கும்  வெதுவெதுப்பு  
இவை போதும் எனக்கு

 துக்கத்தில் இருப்போர் பெரும் சேனைகளாக குமுறுவார்கள் .
 நான் சொல்லப் போவதில்லை  
அவர்களோடு.

கவிதையை முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் ஆகிறது ,
மாபெரும் மௌனம் 
என் மீது கவிகிறது. 
வார்த்தைகளை பயன்படுத்த
 ஏன் எண்ணினேன் என்ற
  தவிப்பே எஞ்சுகிறது..

Thursday 13 August 2020

ஆடிமாதமும் சித்த மருத்துவமும்

ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)

ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).

இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)

இப்போ சுவை பார்ப்போம்..

அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…

மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..

நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…

அதாவது,

இனிப்பு – மண்+ நீர்

புளிப்பு- நெருப்பு + மண்

உப்பு – நீர் + நெருப்பு

கசப்பு – ஆகாயம் + காற்று

காரம் – நெருப்பு + காற்று

துவர்ப்பு – நிலம் + காற்று

இந்த அமைப்புலதான் இருக்கு…

ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)

அதுக்கு என்னா பண்ணணும்?…

ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..

இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன

இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…

அம்புட்டுதான்…

ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…

இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...