Tuesday 27 June 2017

என்னோட நாலு வருசம்

படிச்சனோ இல்லையோ..பட்டம் மட்டும் வாங்குன நாள்...
Graduation-க்கு போனதே friends - லாம் பாக்கதான்...
இப்ப வரைக்கும் நண்பர்களோட கல்யாணத்துக்கு போறதும்,frnd கல்யாணத்துக்கு கூப்புட்டா அப்டிங்கிறதுலாம் இல்ல...frnds-லாம் பாக்கலானு தான்...சும்மா அப்டியே சந்தோஷமா வாழ்ந்த நாலு பேர திரும்ப பாக்கலாம் தான்...
பெரிய குற்ற உணர்ச்சிலாம் இல்ல படிக்காம பட்டம் வாங்குனாதனால....class room-ல இருந்தத விட (விட்டாதானே) வெளில ஊர் சுத்துனதுதான் அதிகம்...biotechnology தெரிஞ்சுதோ இல்லையோ,வாழ்க்கனா என்னனு கொஞ்சம் தெரிஞ்சுது...கதைசொல்லியாகவே விடுதி அறையில்...8.50 க்கு எழுந்து 9 மணிக்கு போனது,எப்டியும் உள்ள விட மாட்டாங்கனு canteen போனது,அங்க போய்   professor  கிட்ட மாட்டுனது...mostly first day first show தான் பாத்ததா நியாபகம்...என்றென்றும் புன்னகை படத்த பார்த்த 30 பேரும் மறக்க மாட்டோம்...ஓகே கண்மணி படத்துக்கு project-அ கட் பண்ணிட்டு போய் மாட்னது...department -ல மொட்ட மாடில தான் அதிகம் இருந்துருப்போம்...புரிதல்கள் மட்டும் மாறி இருக்கு...இருந்தாலும் அவரு  (professor)கேட்டதும் மட்டும் இன்னும் குத்திட்டே இருக்கு...அந்த கல்லூரி காலம் கொஞ்சம் கசப்பான விஷ்யம் தான்...இப்ப புது கல்லூரி வாழ்க்கை....அழகா நகருது....பழைய கல்லூரி பேர இங்க இருக்க ஒருத்தராவது தினமும் நியாபக படுத்திட்டே இருப்பாங்க..நினைப்பு எப்பவும் இருக்கும்..அங்க கத்துக்கிட்டதுதான் இன்னைக்கு வரைக்கும் வழி நடத்துது(books லாம் இல்ல)
என்ன ஒன்னு,அங்க இருக்கும் போது நீ என்ன doctor-ஆ white coat போட்டு சுத்துற-னு கேட்டாங்க..இப்ப தைரியமா போட்டு போறேன்..
படிச்சுதான் கண்டிப்பா இங்க பட்டம் வாங்குவேன்....

அவளு(னு)ம்-2

அவன்;காதலின் தூரல் மெல்ல வீச💑
 அவள்: காதலன் காதோரமாய் பேச ❤

அவன்: நாணம் செல்லமாய் கூச ...💟
அவள்: விரல்கள் இதமாய் உரச ...💘

அவன்: கைகள் வலையோசை பாட💖
அவள்: நமதாசை பாடாய் பட 💕

அவன்: கண்கள் விழிக்கிறது கவி எழுத ...💞
அவள்: இதழ் விரிகிறது இன்னிசையமைக்க💞

அவன்: மேனியெங்கும் மோதும் காற்று சுடுகிறது இதமாக..💗
அவள்: உன் மூச்சின் இன்ப உஷ்ணம் என் உடலெங்கும் பரவ💗

அவன்: உயிர் குளிக்கிறது உன்னிதழின் தீப்பிழம்பில்...💜
அவள்: உன் மார்புச்சூட்டில் வெட்கம் கரைகிறது...
💜
அவன்: வழிந்தோடுகிறது உன் வழியே என்னுயிர்...💛

அவள்: என் ஜீவன் தேடி நான் உன்னில் தஞ்சம் ....💝
அவன்: காதலில் கூடலுக்கேது பஞ்சம் 😉💝

அவள்: என் ஒவ்வொரு அணுவும் கொஞ்சும் உனை...💓
அவன்: அனைத்திலும் மிஞ்சுவேன் உனை 💓

அவள்: உன் ஆண்மையெல்லாம் அறிவேன்💞💞💞
அவன்: பெண்மையாலும் உன்னை சூழ்ந்திடுவேன் ...💞💞💞

அவள்: உன் அன்புச்சிறை நீங்கேன் 💝
அவன்:கைதியாய் பணிவேன் 💟

அவள்: கெஞ்சியே அடிமை செய்வேன் 💝
அவன்: கொஞ்சியே அடிமையானேன்...💟💟

The worst bus journeys???

சுமூகமாக இருந்திருக்க வேண்டிய பயணங்கள்.....

   எல்லா பயணங்களும் சுமூகமாக அமைந்து விட(வதும்)வில்லை. .

சிலருக்கு பேருந்து பயணம் எளிது..சிலருக்கு ரயில் பயணம் வசதி....

5 நிமிடம் முதல் 15 மணி நேரம் வரையும் ,அதற்கு மேலாயும் பயணங்கள் அமைகிறது...

குறுகிய பேருந்து பயணங்களில்...
திடிரென்று ஒரு குரல்...உங்களை தான் இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...(பார்த்து பத்து நிமிடம் கூட இருக்காது) நீங்கள் அழகு,உங்கள் கண்கள் அழகு...ரயில் போகும் போது எட்டி பார்த்தது அழகு,...அது இது.....

ரசிப்பதில் தவறில்லை...ஆண்கள் பெண்கள் இருவரும் தான் சைட் அடிக்கிறார்கள்...
ஆனால் இந்த அழகு அழகி என்ற வார்த்தையில் மயங்குவோம் என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்டாதீர்கள்...

நீங்கள் பேசுவதை கண்டிப்பாய் ஒரு பெண்மகள் தவிர்ப்பாள்...மீறியும் உங்கள் பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
அப்போது அவள் அமைதியாய் இருப்பதற்கு நீங்கள் பேசுவதற்கு சம்மதம் என்றில்லை...நீங்கள் மேற்படி அவளை தொடலாம் என்று அர்த்தம் இல்லை...நிச்சயம் அந்த அண் மகனுக்கு செருப்பு பிஞ்சுறும் என்ற அவளின் இயலாமையின்  பதிலாவது கிடைத்திருக்கும்....அடக்க முடியாத கோவமும்,ஆதங்கமும் நிச்சயம் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும்



அதிலும் இரவு நேர பயணங்கள் அதை விட கொடுமை...

அவள்கள் அமைதியாய் இருப்பதற்கு ,
அருகில் அவளின் குடும்பத்தார் இருந்திருக்கலாம்...அவர்கள் நிம்மதியை ஏன் குழைக்க வேண்டும் என்று இருக்கலாம்...

அதற்கும் மேல் இங்கு தப்பு செய்தவனக்கு தண்டனையை விட,தப்பு செய்யாதவர்களுக்கு தான் அதிகம்...இன்னும் "நீ பல்ல இளிச்சுருப்ப" " ஈ எறும்பு வருவதற்கு முன் பண்டத்த மூடு" "பஸ்ல உன் புள்ளகிட்ட எவன் எவனோ வந்து பேசிட்டுருக்கான்" என்பதெல்லாம் வழக்கத்தில் இல்லாமல் இல்லை...அவளின் சுதந்திரம் பறிபோய்விட கூடாது என்பதற்காகவும்,அம்மா அப்பாவிடம் ஏன் நண்பர்களிடம் கூட பெண்கள் பகிர்ந்துக்கொள்வதில்லை...


பேருந்து என்பது அனைவரும் நிம்மதியாய் பயணம் செய்வதற்குதான்....ஆனால் பெண்களுக்கு அவ்வளவு சுமூகமாக பயணங்கள் அமைவதில்லை...

இன்னும் நிறைய பெண்களுக்கு தனியாய் பேருந்து பயணம் என்றால் பயம்,வீட்டில் உள்ளோருக்கும் இதை அனுமதிப்பதில் பயம்...

நச்சரிக்காதீர்கள் பெண்களை...
அழகு என்ற வார்த்தை பெண்களின் போதை மாத்திரை ஒன்றும் இல்லை...


அவர்களுடைய பயணமும் சுமூகமாய் இருக்கட்டும்....

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...