Wednesday 12 July 2023

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து

முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்..

முதன்முதலில் எழுதிய எழுத்துக்கள்..
என்ன என்னவோ எழுதிருப்போம் ...வாசிச்சிருப்போம்....
எப்டினா...
எத்தன குழந்த பெத்தாலும் முத குழந்த மேல எப்பவும் ஒரு தனி அக்கற இருக்கும்ல..அது மாதிரி...
எப்படி இருப்பினும் அதுதான் தொடக்கம்...அப்படி கொண்டாட பட வேண்டிய எழுத்துக்கள் தான் அவை...
#இளங்குருதி_இயக்கியவை💗👌🐾

Sunday 30 August 2020

XS Gallery..

மேடம் ஒரே பிசி....
Yes..
And finally..
இன்னைக்கும் எழுதலாம் போல...(ஹப்பாடா என்று திருப்தியடைவோர் மண்டைலயே ஒரு மொட்டு...).

நாமளும் எதோ கிறுக்கிறோம்...(ஆணவம்லாம் இல்ல குமாரு...)
அத கொஞ்சம் காட்டலாமேனு தான்...

Colours makes life colourful (சாரல் தெரிக்குது..).

அது என்னவோ தெரில ,என்ன மாயமோ புரில..
வண்ணங்கள்...(மேல சொல்லு...)..

Whenever i see colour,colour,co..lo...ur....அது கலரு...அம்புட்டுதான்..
என்னோட

XS Size gallery...






















ஆனால்,வரைதலில் ஒரு நல்ல உணர்வு..தீர்க்கமான ,ஒழுங்கான அமைப்பு என்றெல்லாம் இல்லை..கனவு போல் அழகான ஒரு அமைவு..மகிழ்தலின் போது வாழ்க்கை இன்னும் வண்ணமுறுகிறது..மன அமைதியின் போது மேலும் அர்த்தமுறுகிறது..ஒரு நல்ல காதலன் போல,வரைதலும் அவ்வாறுதான்..உணர்வுகளை வார்த்தைகளின் வழி உரையாடி யார்தான் வெல்வார்..அது ஒரு அமைதியான உணர்வு..நடு வனம் ,ஆழ்கடல் போன்று...

#Corona holidays...
(இன்னும் என்னலாம் செய்ய காத்திருக்கோ..).

Friday 14 August 2020

தாகம்...

காதல் வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்....

அதற்கு ஏதாவது ஒரு வழியை காதலே தேடிக் கொள்ளும்...

சுகம் கொள்ளு(ல்லு)ம்..

பகிர்தலின் வழி உயிர்ப்பு பெற்றுக்கொண்டே இருக்கும்.....

காதலர்கள்தான் தனித்துவமானவர்கள்...

காதல் பொதுவானவைதான்...

அதன் ஆழமும்,உச்சமும்...அனைவருக்கும் ஒன்றுதான்....
அது காதலாய் இருக்கும் பட்சத்தில்....

நான் வாசிப்பவைகளனைத்தும் உங்கள் விழி வழி பாயும் அந்த காதல் ரச வாசனை...நீங்களும் முகர்ந்துக் கொள்ளுங்கள்....

ரூமி கவிதைகள்:

சலிக்கவில்லை நீ எனக்கு...
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப்போகாதே...

நீர்க்குடுவை
நீர்க்கலயம் 
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால்...

தாகங்கொண்ட மீனொன்று 
என்னுள் இருக்கின்றது..
ஒருபோதும்  கூடவில்லை அதற்கு 
முழுத்தாகமும் தணிக்க..

கடலுக்கு வழி எது?
காட்டுங்கள் அதை எனக்கு !
உடைத்தெறியுங்கள் ,
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை..

மனமுயக்கத்தையும் 
பெருந்துக்கத்தையும் கூட

 நெஞ்சின் மையத்தில் 
 யாருமறியா முற்றத்திலிருந்து 
 நேற்று இரவு எழும்பிய அலையில்  
 மூழ்கடிக்கப்படட்டும்
 எனது வீடு.
 
 ஒரு நிலவினை போல
 எனது கிணற்றினுள் விழுந்தார் .
 அடித்து செல்லப்பட்டது 
 நான் காத்திருந்த விளைச்சல் ..
 ஆயினும் 
 அதுவொரு பொருட்டல்ல .


எனது கல்லறையி்ன் மீது
 மூண்டுள்ளது நெருப்பு 
 படிப்பு 
 கௌரவம் 
 அல்லது மரியாதை
  இவை ஏதும் வேண்டாம் எனக்கு 


இந்த இசை 
இந்த புலரி 
உன் கன்னக் கதுப்பு 
எனக்களிக்கும்  வெதுவெதுப்பு  
இவை போதும் எனக்கு

 துக்கத்தில் இருப்போர் பெரும் சேனைகளாக குமுறுவார்கள் .
 நான் சொல்லப் போவதில்லை  
அவர்களோடு.

கவிதையை முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் ஆகிறது ,
மாபெரும் மௌனம் 
என் மீது கவிகிறது. 
வார்த்தைகளை பயன்படுத்த
 ஏன் எண்ணினேன் என்ற
  தவிப்பே எஞ்சுகிறது..

Thursday 13 August 2020

ஆடிமாதமும் சித்த மருத்துவமும்

ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)

ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).

இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)

இப்போ சுவை பார்ப்போம்..

அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…

மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..

நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…

அதாவது,

இனிப்பு – மண்+ நீர்

புளிப்பு- நெருப்பு + மண்

உப்பு – நீர் + நெருப்பு

கசப்பு – ஆகாயம் + காற்று

காரம் – நெருப்பு + காற்று

துவர்ப்பு – நிலம் + காற்று

இந்த அமைப்புலதான் இருக்கு…

ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)

அதுக்கு என்னா பண்ணணும்?…

ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..

இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன

இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…

அம்புட்டுதான்…

ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…

இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..

Saturday 13 June 2020

Professional and personal..(shhhh....weight loss..)


Thing is that.. நாம எப்டி இருந்தாலும் ,இந்த சமூகம் (சமூகம்  means நம்மள சுத்தி இருக்க நபர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் etc) ஏதாவது ஒரு குறை கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கும்...

Compliments வரதுலாம்,ஏதோ, அத்திப் பூத்தாற் போலோ, எட்டாவது அதிசயமாகவோ வேண்டுமானால் நடக்கலாம்...

ஆனாலும் சிந்தித்துப் பார்த்தால் ,அதிலும் ஒரு பொடி இருக்கும்...


Mental state  பத்திலாம் அதிகமா அவிங்க கருத்துரைக்க முடியாது...அதிகபட்ச சந்திப்புகளே பல மணி நேரங்கள் மட்டுந்தான்...

ஆனால் உடலமைப்புப் பற்றி பேசி அனாடமி வாத்தியார தோக்கடிச்சுருவாய்ங்க...

ஏன்-டி வெயிட் போட்டுட்ட...(ஆமா..அதுக்கென்ன).

எதோ இந்த இடத்துலலாம் சதை புடிச்ச மாறி இருக்கு...(ஆமா...என்ன இப்ப)..

என்னடி வீட்ல நல்ல சாப்பாடோ....
(நீயா சோறு போடுற நாயே..இல்லல..ஓடிரு ஆமா)...

என்னடி அதுக்குள்ள aunty ஆகிட்ட ...(நா aunty ஆகுறேன் ...பாட்டி ஆகுறேன்...உனக்கென்ன மூடிட்டு கெளம்பு...)

சொந்தக்காரங்கதான் இப்டினா...இந்த frnds நாய்ங்க அவிங்களுக்கு மேல...
😒
குண்டூஸ் மயிரூஸ்னு...😫

சிலர்லாம்...
புஸு புஸுன்னு இருக்க....😜
(இதுக்கு நீ என்ன குண்டா இருக்கேனே சொல்லிருக்கலாம்...😴)

ஒவ்வொரு முறை வீட்டுக்கு வந்துட்டு காலெஜ் ஹாஸ்டல் போகும்போதும்...மென்மேலும் கமெண்டுகள் அதிகரிக்கும்...

ஆனாலும் ..எனக்கு பிரியாணி ,ரசமலாய்,கிரில்ட் சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியம்...(ஃபுட்டி என்று கூட சொன்னால் மிகையேதுமில்லை.)

நம் வாழ்வின் மிக பெரிய அங்கம் சோறுதான்...🤓🤓🤓...

இப்போது என்ன செய்யலாம்...

நம்ம எவ்ளோ குண்டானாலும் நம்ம கண்ணாடில பாக்கும்போது ஒல்லியாதான் தெரியும்...(manufacturing defect...இருக்கும் இருக்கும்....)...

உடம்ப குறைன்னு யாரு சொன்னாலும்....நீயா சோறு போடுற..என் தாய் தந்தைதானே...உனக்கென்ன கவலை..வாயையும் ...... மூடி விட்டு  செல்லலாம் ,என்று கூறிவிட்டு நகர்ந்து விடுவது....

நமக்கே ஒரு கட்டத்துல ரொம்ப அசதியா,மசமசனு இருக்க மாறிலாம் உணர்வு வரும்...
உடம்புல இரத்தம் குறைஞ்சிருக்கும்...நல்லா சாப்பிட்டா சரியாகிரும்னு நினைச்சிக்கிட்டு இன்னும் நல்லா சாப்பிட்டா....


ஒரு ட்ரெஸ் கூட பத்தல..அட பாவமே....

சரி உடம்ப குறைக்கலாம்...

But how?...

உடம்ப குறைக்க என்ன சாப்டுறது...?

தடம் மாதிரிதான்....கேள்வி தப்பு....
யெஸ்....
உடம்ப குறைக்க என்னலாம் சாப்பிடக் கூடாது....

ரீசண்டா ஒரு LMES video பாத்தேன்...பிரியாணி சாப்பிட்டே உடம்ப குறைக்கலானு...
அதலாம் விட்ருவோம்..தினம் சாப்பிட காசுக்கு நாம எங்க போறது..நாம இன்னும் காலேஜ் ஸ்டூடண்ட் தானே....


ஓ.கே தென்..உப்பில்லாம சாப்பிட்டா உடம்பு குறைஞ்சிடும்...(உப்பில்லா பண்டம் குப்பையிலே.....நம்மளால முடியாது குமாரு...உப்பை குறைத்தவன் யோகிதான்...ஆனா நான் யோகியாகி என்னப்பா பண்ணப்போறேன்...)..


அத திங்காத இத திங்காத....அப்டி இப்டி...ஆயிரம் அட்வைஸ்....(போதும் ..உங்க அறிவுரை கூந்தலலாம் நிப்பாட்டுறீங்களா)..

நாமளே பாத்துக்கலானு...களத்துல இறங்கியாச்சு....

நம்ம ஒரு சித்த மருத்துவ மாணவி வேற...
பயோ கெமிஸ்ட்ரி ரெண்டு டீச்சர் சொல்லிக் குடுத்துருக்காங்க.....(gct gsmc)...

சரி ...நாம தினம் திங்கிற சோறு என்ன ஆகுது...

தேவையான சத்த உறிஞ்சுக்கிட்டு ஆய்யா வெளில போய்டுது....

அதிகமா சாப்பிட்டா,அதிகமா ஆய் போகும்...ச்சீ த்தூ...

அதிகமான சத்து கொழுப்பா (fat) தங்க ஆரம்பிச்சுடும்...

நாம என்னா தின்னாலும் கடைசியா krebs cycle தான் விதி....

அத விடுங்க...

கொஞ்சம் உயிரியல் பூர்வமா பேசுவோமா...
ஒரு நாளைக்கு சாதரணமா  ஒரு மனுசனுக்கு ,மனுசிக்கு தேவைப்படுற சாப்பாட்டோட அளவு..-2000 கிலோ கலோரி...

சரி..
(நல்லா ஓடி ஆடி வேலை செய்றவிங்களுக்குப்பா...நாமலே நாளு நாள் ஸ்கூல் போவோம்..மீதி நாள் மட்டம் போட்ருவோம்...)...

ஆனாலும் நாம எல்லாரும் சாப்பிடுற 2000 கிகலோரி சாப்பிடுறோம்...

இருக்கட்டும்...

சோத்துல மூணு இல்ல நாளு பெரிய சார்ங்க இருக்காங்க....

1.கார்போஹைட்ரேட்
2.புரதம்
3.கொழுப்பு
4.நார் சத்து...
நிறைய விட்டமின் ,மினரல்ஸ்னு சின்ன சின்ன சார்ங்களும் இருக்காங்க...

உள்ள போய் ஒவ்வொருத்தரா அவங்க அவங்கள்ட்ட இருக்க சத்த பிரிச்சு குடுப்பாங்க...

மீதி இருக்குறத சேர்த்து வச்சுப்பாங்க....நாம விரதம் ,நிஜமான உண்ணாவிரதம் இருக்க நாட்களில அதலாம் பயன்படுத்தி ,நம்மள உசிரோட வச்சிருக்கும்...
(ஆனா அதலாம் நாம எங்க இருக்கோம்...கழுத கெட்டா பானிபூரி கடை...)..

Carbohydrate தான் முதல metabolism பண்ணி தேவையான சத்த தருது..அது முடிஞ்சதும் புரதம்...அதுக்கப்பறம்தான் கொழுப்பு...

சரி...நாம உடம்ப குறைக்கனும்னா என்னா பண்ணனும்....அதாவது சேர்த்து வச்சுருக்குற கொழுப்பக் கறைக்கனும்...

நாம எடுத்துக்கிற உணவுல Carbohydrate அளவ கம்மிப் படுத்துனாதான்,அடுத்து நடக்குற புரதம் கொழுப்போட வளர்சிதை மாற்றம் நடந்து கொழுப்போட சத்த உடம்பு பயன்படுத்தி வாழ ஆரம்பிக்கும்.... கொழுப்பும் கறையும். உடம்பும் குறையும்...
(அதான் low carb diet)...

எது எதுல அதிக carb இருக்குனு கேக்குறீங்களா...(google  ஆண்டவர்ட்ட கேளுங்க)...
சரி...ஒரு கிலோ குறைக்க எவ்ளோ கலோரி எரிக்கனும்......

1 kg-7700 kcal..இவ்ளோதான் கான்செப்ட்....


இத டயட் மூலமாவும் ,உடற்பயிர்ச்சிகள் மூலமாவும் burn பண்ணலாம்...

இதான் கணக்கு...இத வச்சு...நமக்கு ஏத்த மாதிரி டிசைன் பண்ணிக்கலாம்...(என்ன என்ன சாப்ட கூடாதுனு youtube ஷைனி சுரேந்திரன் வீடியோ பாருங்க)

(விளம்பரங்கள நம்பாதிங்க...இந்த மூனு நாள்-ல உடம்ப குறைக்கலாம்..நாளு நாள்-ல குறைக்கலாம்ங்கிறதெல்லாம்..என்னாங்கடா கதை....)


ஒவ்வொரு உணவுக்கும் எவ்ளோ கலோரிங்கிற கணக்கு,google -la பார்த்துக்கோங்க....

அதிகமான எண்ணெய் பண்டங்கள்,சர்க்கரையோட அளவ குறைச்சிட்டு, கீரைகள் காய்(கறி)கள் பழங்கள்,நட்ஸ் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்..
இதுலதான் நிறைய சாப்பிட்டாலும் கம்மி கலோரி....பாத்துக்கோங்க...கலோரி முக்கியம் அமைச்சரே....

ரெகுலரா மானிட்டர் பண்ணுங்க...

அதுக்கலாம் முன்னாடி ஒரு மருத்துவர பார்த்து ,உடம்புல எதும் ஹார்மோன் குறைபாடு,கருப்பை சார்ந்த பிரச்சனைகள்,metabolic disease,மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கானு பாத்துட்டு,மருத்துவத்தையும் மேற்கொண்டுகிட்டே, அதுக்கேத்த மாதிரி சாப்டுங்க...

உடல் பருமன் தான் பல நோய்க்கு காரணம்னு வழவழன்னு எதுக்கு பேசிக்கிட்டு....

எல்லாரும் நல்லாருப்போம்...
எல்லாத்தையும் நேர்மறையான எண்ணங்களோட நகர்த்துவோம்...

நன்றி....(நல்ல feel ல..எனக்கும்தான்...)..


Thursday 28 May 2020

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்..

பட்டாம்பூச்சி கூட்டத்திலிருக்கும் ஒரு பட்டாம்பூச்சிக்கு பிறந்தநாள்....

மொன்ன....

பட்டாம்பூச்சி அவ...
சிறகடிச்சு பறந்துக்கிட்டே இருப்பா...

மொன்ன நீ, ஊர்குருவிலாம இல்ல...
நீ இன்னும் இன்னும் மேல மேல பறந்துக்கிட்டே இருப்ப...

26 வயசாச்சு மொன்ன..

பொறுப்புகள் கை நீட்டி கூப்டுது...
கைய இருக்கமா புடிச்சுக்கிட்டு வாழ்க்கைல நகந்துக்கிட்டே இரு மொன்ன...

எல்லாத்தையும் நிதானமா  யோசிச்சு முடிவு பண்ணு ....

எல்லாரும் திருப்பி அன்பதான் தருவாங்கனு அதிகமா நம்பிக்க வைக்காத மொன்ன...

உன்னோட உணர்வுகள் ரொம்ப இளகுனது....அத தங்கம் மாதிரி பாத்துக்கிறவங்கள்ட நியாயமா காட்டு மொன்ன...

Fit ஆகிட்ட மொன்ன...
26 வயசுல...(இத ஏன்-டி அடிக்கடி சொல்றனு கேக்றியா...விடு மொன்ன...)..

Single girl child மொன்ன நீ...
நிறைய வளந்துட்ட....

சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அழகா அட்ஜஸ்ட் பண்ணி போற...

சூப்பரா பைக் ஓட்ற மொன்ன அதும் அந்த ஊருல...எனக்கு அந்த ரோட்லாம் பாக்கவே பதட்டமா இருக்கும்...

உடலளவுளையும் மனதளவுளையும் நல்ல தேர்ச்சி அடைஞ்சிருக்க மொன்ன...


அந்த மரத்துக்கு நடுல இருக்க மயில் மாதிரி அழகா இருக்க மொன்ன...

நல்லாருப்ப மொன்ன...

நாங்க இருக்கோம் உனக்காக...

We always love you soooo soooo much monna...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொன்ன...

Tuesday 26 May 2020

மாயமான்..






பொய்மான் கரடு -
அமரர் கல்கி எழுதிய அமர இலக்கியம்தான்...
சாகா இலக்கியம்...யாரையும் சாகடிக்காத,யாரும் சாகாத "கொப்பனாம்பட்டி கொல கேஸ் " -விறுவிறுப்பான கதை...

பொய்மான் என்கிற மாயமானைக் கருவாகக் கொண்டு கதை நகர்கிறது...

வெகுளி,கருமியான நாயகன் செங்கோடன் 
தைரியமான  அழகு சுந்தரி செம்பளவள்ளி....

வேகமான கதைக்களம்...
விறுவிறுப்பான கதை....
Asusual கதை திருப்பங்கள்...


இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் என்ன நிகழுமென்பதை உணர்த்தும் ஒரு கதை...

ஆண்களின் புனை சுருட்டை கபளீபரமாக காட்டியுள்ளார்...

கொஞ்சல்கள்....-இன்னும் கொஞ்சம் மிகப்படுத்திருக்கலாம்...ஆனால் அந்த சூழ்நிலையில் வாழும் கதாநாயகனுக்கு கணக்கச்சிதம் இவைதான்...

"என் கண்மணியே! என் செல்லக் கிளியே ஆடும் மயிலே பாடும் குயிலே உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா?


"காதலுக்கு கண்ணில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்...அறிவுக்கூடவா இல்லை"-யோசிக்கக்கூடிய ஒன்றுதான்...


சேலம் - நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த பொய்மான் கரடு. சேலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள பொய்மான் கரடு அமைந்துள்ளது...இப்பகுதியில் அமைந்துள்ள கரடின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் கரடின் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால், அந்த மலையை நெருங்க நெருங்க அந்த மான் இருப்பது போன்ற மாயத்தோற்றம் மறைந்து விடும். அதனாலேயே இப்பகுதிக்கு பொய்மான் கரடு என்று பெயரிடப்பட்டது.

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...