Thursday 2 May 2019

புத்தகமும்...புகைப்படங்களும்....

நாமலாம் பொதுவாவே sentimental kind of மனுசங்க தான்....
புடிச்சத பண்ணனும்னா பாத்து பாத்து பண்ணுவோம்...
மனசுக்கு நெருக்கமான பல விஷ்யத்துக்கு sentiment பாப்போம்...

அதே மாதிரிதான் புத்தகமும்,புகைப்படமும்...எழுத்தும்,ஓவியமும்....
மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கக்கூடியது...

அதப்பத்தி எழுதனும்னா மைபேனாலதான் எழுதனும்னு ரொம்ப நாளுக்கப்றம் parker பேனால மை கடன் வாங்கி நிரப்பிட்டு எழுதிட்ருக்கேன்...

ஓய்வே இல்லாதது..நம்ம எண்ண அலைகள்தாம்...

அதிகபட்சமா எல்லாரும் எழுதுனதுதான்...சொல்லப்பட்டதுதான்...

அது அது எழுதுறவங்களோட,வாசிக்கிறவங்களோட பாணிக்கு,கோணத்துக்கு ஏத்தாப்ல மாறுபடும்....

அந்த பார்வை நமக்கு பிடிச்சா கொண்டாடுவோம்...இல்லனா கண்டுக்காம விட்றுவோம்...அப்டியும் இல்லனா கழுவி ஊத்துவோம்...

அப்டியான என் பார்வையில்...

புத்தகமும்,புகைப்படமும்..
எழுத்தும்,ஓவியமும்....

நாம ஒரு மேற்கோள் பாத்துருப்போம்
"Photography is the story i fail to put into words".

எழுதினத வாசிக்கும் போது கற்பனையா நாமளே ஒரு காட்சிய உருவகப்படுத்தி மனத்திரைல பாப்போம்...

புகைப்படம்
காட்சியாவே நம்ம கண் முன்னாடி இருக்கும்...அதை எடுக்கிறவங்க கற்பனை இருக்குமே,பாக்குறதுல கற்பனையோட பங்கு குறைவுதான்...

பல கவிதை புத்தகத்துல கவிதைக்கு தகுந்தாப்ல படம் வரைஞ்சிருப்பாங்க...
அந்த படத்தையும் கவிதையையும் சில சமயம் பொருத்தியே பாக்க முடியாது...புரியாதும் வேற...
கவிதையோட வாசிப்புல கற்பனைய மிதக்க விட்ட அதவிட அருமையான ஒரு படம் நமக்கே கிடைக்கும்..

படங்கள பாக்க அதிக மெனக்கெடல் தேவை இல்லை...ஆனா வாசிப்புக்கு ஆர்வமும் கொஞ்சம் மெனக்கெடலும் தேவை...

கற்பனை,நிஜம் இதுதான் ஆதாரம் எல்லாத்துக்கும்..

ரெண்டுலையிலும் லயிக்கலாம்...
ஆனா கற்பனைலதான் ஆர்வமதிகம்...

கலைகளை வளர்த்து
கவலை மறந்து
காற்றுப்போல் அன்பு செய்வோம்...🐾💙





No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...