பாதி நிலவிலும் உருக வைக்கிறாள்....
ஒளிந்து ஒளிந்து விளையாட்டு காட்டினாலும் ஓய்ந்து போக மாட்டேனடி கண்மணி😘😘😘😘
நிலா தோழிக்கு
வாழ்க்கை ஏதோ ஒரு விளிம்பில் நிறுத்தி ,"வாழ்க்கை நீ நினைத்தது போல் எல்லாம் இல்லை" என 'சப்'பென்று அறைந்து விட்டு, மீண்டும்.."வா...வாழ்வை தொடங்கு "என்று தேனீர் கோப்பையை நீட்டும்.மீண்டும் மீண்டு வாழச் செய்யும். அற்பமோ ,அதிசயமோ வாழ்ந்தாக வேண்டும்..இவ்வாழ்வை அன்பின்கண் நகர்த்துவோம்...💝
பாதி நிலவிலும் உருக வைக்கிறாள்....
ஒளிந்து ஒளிந்து விளையாட்டு காட்டினாலும் ஓய்ந்து போக மாட்டேனடி கண்மணி😘😘😘😘
நிலா தோழிக்கு
மழை(லை) மேக பித்துக்காரி...
நுனிச் சிட்டின் காதல்க்காரி...
மரங்களின் வளைவு நெளிவுகளின் பயித்தியக்காரி....
மயில் தோகை வண்ணங்களில் தொலைந்துப்போகிறேன்....
கொடைக்கானல் மலையில் குழந்தை யானவள்...
பச்சை நிறங்களில் இச்சைக்கொண்டவள்...
அந்தி வானத்தின் வண்ணங்களை அள்ளிப்பூசிக் கொள்கிறேன்....
பறவையின் சிறகுகளில் மிதக்க நினைத்தவள்....
அந்த ஒற்றை வெள்ளியை ஓயாமல் பார்க்கிறேன்...
பிறை நிலவில் அமர்ந்து கொள்கிறேன்...
கண்கள் நிறைய இயற்கை வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்....
கரம் நீட்டிக் காத்திருக்கிறேன் உன்னுடன் பயணிக்க தோழனே...
இப்படிக்கு
உன் கவிஞை
தனிப்பயணங்கள்தான் என் கவிஞையை கண்விழிக்கவைக்கிறது....
உன் நிழல் விழும் இடங்கள் மட்டும் இதமாக...
என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...