Sunday 6 August 2017

பெண் கதைகள்...

பொண்ணுங்கனாளே இந்த பிரபஞ்சத்தோட ரொம்ப பெரிய வரம்...மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்...பாவையில்லையேல் பாரதியே இல்லை..மது மாதுக்கு தான் உலகத்துல அடிமைகள் அதிகம்...அப்டி இப்டினு.  ..ப்ளா..ப்ளா..ப்ளா.....
பசங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை பொண்ணுங்கதான்....ஆனா பொண்ணுங்களுக்கு இருக்க பெரிய பிரச்சனை பசங்க அப்டினுதானே சொல்லனும்னு நினைச்சிங்க...ஆனா அப்டி இல்ல..அப்றம் வேறென்ன ம..ர் பிரச்சனை-னு கேக்றீங்களா...அதேதான் அதேதான்..அதே மயிரில் உள்ள பேன்கள்தான்...
அதிலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களிடம்...சாரி...மாணவிகளிடம்...
அந்த பேன் கடிக்கும்போது...எல்லோர் முன்னிலும் சொரியவும் முடியாம,சொரியாம இருக்கவும் முடியாம் இருக்க மன நிலை இருக்கே...அது கொடுமை.....சாய்ந்தரம் வீட்டுக்கு வந்த உடனே தலைய அவுத்து பேன் சீவியே ஆகனும்..கூட்டமா இருந்தாக்கூட அரிக்காது..ஆனா ஒன்னு ரெண்டு இருந்துட்டு தலைல மேயும் போது வர உணர்வு இருக்கே..வாயால சொல்ல முடியாது......ஞாயிறன்று பெரிய வேளையே தாய்களுக்கெல்லாம் பேன் பார்ப்பதுதான்..பேன்பார்க்கும் போது ஒரு சில இடத்துல ரெண்டு மூனுனு இருக்கும்..அதுல ஒன்ன விட்டா கூட வர மனசு கஷ்டம் இருக்கே..அப்பப்பா...நிறைய பேன் இருக்க தலைல பேன் பார்த்தாதான் சுவாரசியமே...அதுலயும் இந்த அம்மாங்க இருக்காங்களே,அவங்க தலைல அதிகமா பேனே இருக்காது..ஆனா நம்மள பாரு பாரு-னு நாஸ்தி ஆக்கிருவாங்க...ஆனா இதுலாம் ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி....இப்போ எல்லாரும் டீவி..மொபைல்தான்...

இந்த தலைமுறைக்கு தலைல எண்ணைய் பட்டாலே அலர்ஜி..அதுலயும் கைல ஊத்தி தலைக்கு எண்ணைய் தேக்கிறதுல்ல அப்டி ஒரு வெசனம்(என்னையும் சேர்த்துதான்)....

ஆக கருத்து என்னான பேன் போக்க வழி உங்களுக்கே தெரியும்...திரும்ப சொல்லி போர் அடிக்கல..
இதுலயும் பொண்ணோட முடிக்காகவே காதலிச்சு பேதலிச்சவன்லாம் வரலாற்று அசையாம நிக்கிறாப்டி....தலைல மூளை இல்லனா கூட பிரச்சனை இல்ல...ஆனா முடி இல்லானா அம்புட்டுதான்...

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...