Sunday 26 June 2016

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு...

கவிதை தொகுப்பு என்பதை விட ஒரு இயற்கையின் காதலன்😍,குழந்தை பிரியன்💞💟,ஒவ்வொரு கணத்தையும் ரசித்து 👌வாழும் ஒரு கடவுளின் வாழ்க்கைத் தொகுப்புதான் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு💐....

கொக்கின் அலகில் மீனாக ஆழமான அன்புடனும் ஏக்கத்துடனும் அழைத்து 🏃....

சுமதியக்காவின் கூந்தல்-கவிதையாகி போனது அவள் காதலால்💝..

கடவுள்களுக்கும் பசிக்கும்போதும் ,கடவுள்களும் மாமிச பட்சினிகள்தான்....-வேற level ண்ணா👏👏👏👏...

மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்ட மனைவியின் கதறல்😭😭-இதுக்குதானா 8 லட்சம் செஞ்சி கட்டி வந்த...

பத்திரிக்கையாளனின் வலி....

மரங்களின் மேல் கொண்ட காதல்,💖 இயற்கையின் மேல் கொண்ட ஆர்வத்தால் ,அவற்றின் அவல நிலை கண்டு அழுதவை..-தலையணை கண்ணீராக இல்லாமல், சாவு கண்ணீராக கணக்கிறது நெஞ்சில் ...😪😪😪

சமூக அக்கறை கொண்ட புலம்பல்கள்-யாரின் சாபமோ திரவ வடிவில் புட்டியடைத்துக் கிடக்கிறது சாத்தான்...🍻🍷🍹

பெயர் கேட்காமல் போனதால் கடவுள் என்ற பெயர் பெற்ற நெற்றி முத்தமிட்ட சிறுவன்......🍬🍭

தெளிவாக புரிந்தது-எனது கைகளில் இருக்கும் பெண்மை என் அம்மாவும் என் பாட்டியும் என்று....👍👌

அப்பாவின் பொறுப்புகளின் வழி பதிய வைத்த முகம்,பெயர் சொல்லி அழைக்காத அப்பா-அப்பா....📖

சொல் தீவிரவாதிகள் தான் அதிகம் இங்கே....-நாவில் ஆயுதம் ஏந்தியவர்கள்...📌🎶

ஆம் ,கடவுள் சகமனிதனாய் வாழ்ந்துக் கொண்டிதான் இருக்கிறார்கள்.....

சில கவிதைகள் எத்தனை முறை படித்த போதிலும் இன்னொரு முறையென மனது ஏங்க வைக்கும்.-உங்கள் கவிதைகளும்தான்....🎶🎼🎻🎷🎸📓📕📖


ரொம்ப நாள் கழிச்சு படிச்சதும் மட்டும் தான் வருத்தம்.....😭

நித்தம் ஒரு முத்தம் தா....

நீ அசதியில் படுக்கைக்கு வரும் போது,உன் காமமெல்லாம் வேண்டப்போவதில்லை நான் . .காமமில்லா கழுத்து முத்தம் மட்டும் போதும்,என் மார்போடு உனைத்தாங்கி கடந்துவிடுவேன் இந்த இரவை...

ஆனாலும் நீங்க ரொம்ப அம்மாவ இருக்கிங்க...

பிரியா எல்லாத்துக்கும் செல்லம்..
ஆனா cavities பத்திதான் பயமா இருக்கு....



என்னடா இது கூத்தா இருக்கு...
எப்ப பாரு cavities cavitiesனு...நாங்களும் அததானேடா சாப்டு வளந்தோம்....


ஆனா இந்த காலத்து அம்மாங்க ரொம்ப அம்மாவா இருக்காங்க...


#ads_tv

கருவறைத் தோழனுக்கு பிறந்தநாள்

கருவறைத் தோழனுக்கு பிறந்தநாள் இன்று.  .
கருவறைத் தோழன்,நண்பன்,எதிரி,தம்பி,அண்ணன்,அப்பா என்று அப்பப்ப அவதாரம் எடுத்து இ(எ)ன்றும் பார்த்துக்கொள்(வாய்)கிறாய். எனக்கு விவரம் தெரிந்து நீ விட்டுக் கொடுத்ததுதான் அதிகம். பொறுமையில் மலைப்போல்,கோபத்தில் மின்னல்போல்.   . ஆயிரம் ஊடல் வந்தாலும் அடுத்த நொடி அரவணைத்துக் கொள்ள செய்து விடுவாய்.  நம் வீட்டின் செல்லக்குழந்தை. வளர்ந்தும் பழகுவதில் குழந்தை தான் நீ இன்றும்.  .ஆனால் அக்கறைக்காட்டுவதில் தந்தை நீ.  .அனைத்தும் பகிர்வாய். அறிவுரைக் கேட்பாய்.  .நீ எப்படி என்றால் உன்னைப்போல் தான் என்பாய். உன்னை எவ்வாறு வழி நடத்துகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் என்றும் உன் வளர்ச்சிக்கு தாய்ப்போல் துணை நிற்பேன்.கல்வி துணைக்கொண்டு வளர்வாய். நல்ல மனிதனாக தொடர வாழ்த்துக்கள்.  .

மனமுருகிய வாழ்த்துகள் .....👍🎂🎂🎈

துணை..

நீ துணை இருக்கையில் ,குறை ஏதுமில்லை இயற்கையே....

தோழியுடன்....

ஆத்மநிலைய வேளாண் பூந்தோட்டம் -கேரளம்
      தமிழகத்தின் தென் எல்லை முடிவு,


கேரளத்தின் எல்லைத் தொடக்கத்தில் உள்ள பூந்தோட்டம்,குளிர்ச்சியுடன் வரவேற்றது. நுழைவுவாயிலிலே,வண்ண வண்ணப் பூக்கள்-மனத்தை திறந்தன அந்த அழகியல்.  .ஏகாந்த பயணம் ஆரம்பமானது பூந்தோட்டத்தில்.  .மீன்களின் செல்ல கொஞ்சல்கள்,ஆர்கிட்களின் அணிவகுப்பு,கொஞ்சும் புறா,பேசும் கிளி,தோகை கொண்ட கோழி,வைரம் பதித்தது போன்ற புறா,அதன் அந்திவான ஆதவன் நிறங்கொண்ட கண்வளையம்,காதல் பறவைகள், போன்றவைகளின் இனியோசை,பட்டாம்பூச்சிகளின் ரீங்காரம்,மூலிகைச்செடிகளிலிருந்து வீசிய மணங்கள்,சுண்டி இழுக்கும் நிறங்களில் மனதைக்கவரும் மலர்கள்,அபூர்வ மரங்களிடம் வியப்பு,பிரியும் போது மன இறுக்கத்தைப் பரிசளித்த கீச்சிட்டு அழைத்து பேசிய அந்தக் கிளி,கூண்டுக்குள் சோகத்தில் தவித்த அந்தக் குட்டி நாய்,யாராவது கொஞ்சம் கொஞ்சிப் பேசி விட்டு செல்லமாட்டார்களா என்று கெஞ்சும் கண்கள்தான் அனைத்து அடைக்கப்பட்ட செல்லக்குட்டிகளுக்கும் . .

பச்சைக்குள் இச்சைக்கொண்டு திரிந்து,அனைத்து அலைவரிசையும் ஆன்மாவோடு பொருந்தியதால்,மனதை அங்கேயே உலவ விட்டுவிட்டு,உடலை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்.  .

மாஞ்சோலை

மாஞ்சோலை.  


             

 நண்பர்களோடு கலகலப்பாக தொடங்கியது காலை பயணம்.                            
கல்லிடைக்குறிச்சியில் கச்சிதமான சிற்றுண்டி....மன நலம் பாதிக்கப்பட்ட அந்த மனிதனின் கை சுழற்றி செய்த அந்த நடனம்    -நெஞ்சம் நீங்காதவை..


கல்லிடை-மாஞ்சோலை.                  


              பின் இருக்கையில் காற்றோட்டமான மலைப்பயணம் ஆரம்பம்...            
            
              மணிமுத்தாறு தலைவாய்க்கால் -                 நதியே!சிறு சிறு நெளிவுகளும்,சிதற விட்ட அலைகளும் தான் உன் அழகு...    

              முகில் போர்த்தி,இயற்கை மஞ்சத்தில் வீற்றிருந்தது மாஞ்சோலை...மலைக்கொஞ்சும் மணிமுத்தாறுதான் உச்சம்....  
       
               பேருந்து அளவுதான் சாலையே...மலையின் அத்துனை வளைவுகளிலும், சாலையின் மோசமான நிலையிலும் ,அசராமல் பாதுகாப்பாக ஓட்டிய ஓட்டுனரைப் பாரட்டியே ஆகவேண்டும்...


        இதமான தென்றல் காற்று இதயம் நனைத்தது...சாளரம் வழி கண்கள் அலைப்பாய்ந்தது.

        மணிமுத்தாறின் குட்டி அருவியிலிருந்து புலிகள் சரணாலயம் தொடக்கம்..(ஒரு புலி கூட பாக்கல ..அது வேற விஷ்யம்...mind voice:புலி இருந்தாதனே பாக்க).

        ஊட்டியின் வனப்பைப் போல் வழியெங்கும் வண்ணப்பூக்கள்....மரங்களின் அணிவகுப்பு...செந்தில்லையின் நிறக்கவர்ப்பு...ஆரஞ்சு நிற ஆர்க்கிட் தான் அள்ளிச்சென்று விட்டது மனதை...


         தேயிலைத் தோட்டத்திற்குள் உள்ள வீடுகளையும்,மலர்களையும் ,மழலைகளையும் ரசித்துக்கொண்ட  நடைப்பயணம்...    

        தொட்டால் சுருங்கி,முகம் மலர்ந்த மனிதர்கள்தாம் அதிகம்...

        தேயிலைத்தோட்டத்தில்  உள்ள தேன்க்கூடுதான்... கானக கண்டுபிடிப்பு...

         விளையாட்டு, நகைச்சுவை என்று நகர்ந்து.....தேயிலை பானம் பருகிவிட்டு,மீண்டும் அதே பேருந்தில் த்ரிலான பயணம் பாபநாசம் நோக்கி.........

 போகும் வழியில்  வண்டிமறித்தம்மன் பிரமாண்டம்....                     மயில்தோகை  வண்ணங்களில் ஒர் கோபுரம் ஈர்ப்பு...              
           பாபநாசம்-அகத்தியர் அருவி.........                      
           தண்ணீர் பார்த்ததும் கால்கள் நிற்கவில்லை தமையனுக்கு....ஆசையை அருவியில் நனைத்துவிட்டு வந்தான்....      
   
         சாரல் காற்று சுவாசம்,கால் நனைத்ததால் உச்சந்தலை குளிர்ச்சி..

         அருவியை தொடர்ந்துக்கொண்டே மலை ஏறல்... சின்ன அருவிகள்...சின்ன சின்ன நீரோட்டங்கள்..(சின்ன சின்ன ஆச...நெஞ்சில் திக்கி திக்கி பேச,மலைச் சாரல் வாசம் கொஞ்சம் காத்தோட வீச)....மலைக்கேற்ற மரஞ்செடிகள்......அங்கு அங்கு நிழல்களில் நிழற்படங்கள்......விட்டுப்பிரிகிறோம் என்ற தவிப்பு ....

         நண்பர்களின் கைக்கோர்த்து,கதைப்பேசி,கலாய்த்து,வாய்விட்டு சிரித்து,குரங்குக்கு பயந்து,தேயிலையை குரங்குகளுக்கு பரிசளித்து(தொலைச்சதுக்கு இப்டி ஒரு buildupனுலாம் கேக்காதிங்க),பாடல் பாடி(சரி...... வாசிச்சு),மன திருப்தியுடன் தோழி தோழர்களோடு உரையாடி திருநெல்வேலி திரும்பினோம்...

         கண்களில் நிழல்களைப் பதியவைத்து,இமை மூடி,எண்ணற்ற நினைவிடம் கொண்ட எண்ண சீவத்தில் ஊன்றி விடுகிறேன்..

         எதிர் பாரத நட்பு, புரிந்துக்கொள்ளும் முன்னமே பிரியும் குழந்தைப் பிரியம்,புதிய மனதர்களின் புன்சிரிப்பு,அணுகிறாத சூழ்நிலைகள்...இயற்கையின் மேல் வியப்பு...

          ஒவ்வொரு முறையும் இயற்கை புதிய அனுபவங்களை அனுபவிக்க வைத்து,சுகமான நினைவுகளுடன் வாழ வைக்கிறது.....

இயற்கைக்கு நன்றி....

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...