ஆதி அத்தி...
ஆதிமந்தி💞ஆட்டனத்தி💝மருதி...
வரலாற்று நாடக நூல்..
ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் காவிய நூல்-அப்டிங்கிறது ஆசிரியர் குறிப்பிட்டது..
ஆனால் மருதிதான் -காதல்க்காரி..🐾💝
கி.பி.முதல் நூற்றாண்டுல நடந்தது மாதிரி கதைக்களம்..ஒரு வரலாற்று நிகழ்வ தொகுத்து ஆசிரியர் அழகான நயமிக்க தமிழ்-ல கொடுத்திருக்காரு..
நீ என்ன எவ்ளோ love பண்றங்கிற கேள்வி காலாங்காலமா கேட்டுட்டு வராங்க😂..
அதுக்கு உவமையோட பதில் சொல்லி பிச்சுருக்காய்ங்க....
மருதி -பொன்னி
மருதி-அத்தி
ஆதி-அத்தி
வசன அமைப்புகள்
கிலுகிலுப்பு...
மருதி-பொன்னி...தோழிகள் பேசுவது போல் ஒரு காட்சி வரும்...(இன்று வரை பெண் பிள்ளைகள் அப்படிதான் பேசிக்கொள்கிறார்கள்...😂😄🤗)
சங்க கால பாடல்களுடன் சேர்த்து அருமையான படைப்பாக உள்ளது. ஒரே மூச்சில் முடித்து விடலாம்...
வாசிப்பிற்கு பின் காவிரி,காவிரி பூம்பட்டினம் பற்றியதொரு பெரிய மதிப்பு வருமென்பது உறுதி..
காதலின் நாயகி மருதி...
அந்த பாடல்.
"பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை யாரறிவார்..?
ஆதிமந்தி பாடுவது:
பெண்ணணங்கே போய் வருவாய்- உன்
பேரன்பை நானறிவேன்..
ஆட்டனத்தி பாடுவது:
அன்புடனே கால்வருடி ஆதரித்தாய் பெண்மணியே
என்றனுயிர் தான் கொடுத்த தெய்வமன்றோ நீ யெனக்கே?
ஆதிமந்தி:
இன்பமெல்லாம் எனக்களித்தாய்- நம்
இருவருள்ளம் ஒன்றலவோ?
இருவரும் இணைந்து..
பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை மறவோமே...!
முடிவில் கண்முன்னே ஒரு நாடகம் அரங்கேறியதை,நம் கற்பனைகள் அரங்கேற்றியதை நிச்சயம் உணரலாம்...
வாழ்க்கை ஏதோ ஒரு விளிம்பில் நிறுத்தி ,"வாழ்க்கை நீ நினைத்தது போல் எல்லாம் இல்லை" என 'சப்'பென்று அறைந்து விட்டு, மீண்டும்.."வா...வாழ்வை தொடங்கு "என்று தேனீர் கோப்பையை நீட்டும்.மீண்டும் மீண்டு வாழச் செய்யும். அற்பமோ ,அதிசயமோ வாழ்ந்தாக வேண்டும்..இவ்வாழ்வை அன்பின்கண் நகர்த்துவோம்...💝
Tuesday 16 April 2019
என் பழைய பனை ஓலைகள்📜💝🐾
என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...
-
ஈருருளி...(சைக்கிள்) (History வகுப்புலாம் இல்ல...அத விக்கிபீடியால பாத்துக்கோங்க... ) சைக்கிள் பெல்... அந்த ஓசை...கிளிங் கிளிங்ன்ன...
-
சந்திரிகையின் கதை... நீண்ட நாட்களுக்கு பின் நிகழ்ந்த ஏகாந்த வாசிப்பு... பெரும்பாலும் பாரதியாரின் புத்தகங்களை வாசிப்பது வழக்கமி...
-
நாம யாரையும் புடிக்காம,எதுவுமே புடிபடாம தனிமைல இருக்கும் போது,நம்ம பக்கத்துலையே உக்கார ஒரு துணை கிடைச்சா....,அவளும் அழகா அழகா கதை சொல்லி சி...