Tuesday 16 April 2019

ஆதி அத்தி🐾📜

ஆதி அத்தி...
ஆதிமந்தி💞ஆட்டனத்தி💝மருதி...

வரலாற்று நாடக நூல்..
ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் காவிய நூல்-அப்டிங்கிறது ஆசிரியர் குறிப்பிட்டது..
ஆனால் மருதிதான் -காதல்க்காரி..🐾💝

கி.பி.முதல் நூற்றாண்டுல நடந்தது மாதிரி கதைக்களம்..ஒரு வரலாற்று நிகழ்வ தொகுத்து ஆசிரியர் அழகான நயமிக்க தமிழ்-ல கொடுத்திருக்காரு..

நீ என்ன எவ்ளோ love பண்றங்கிற கேள்வி காலாங்காலமா கேட்டுட்டு வராங்க😂..
அதுக்கு உவமையோட பதில் சொல்லி பிச்சுருக்காய்ங்க....

மருதி -பொன்னி
மருதி-அத்தி
ஆதி-அத்தி
வசன அமைப்புகள்
கிலுகிலுப்பு...

மருதி-பொன்னி...தோழிகள் பேசுவது போல் ஒரு காட்சி வரும்...(இன்று வரை பெண் பிள்ளைகள் அப்படிதான் பேசிக்கொள்கிறார்கள்...😂😄🤗)

சங்க கால பாடல்களுடன் சேர்த்து அருமையான படைப்பாக உள்ளது.  ஒரே மூச்சில் முடித்து விடலாம்...

வாசிப்பிற்கு பின் காவிரி,காவிரி பூம்பட்டினம் பற்றியதொரு பெரிய மதிப்பு வருமென்பது உறுதி..

காதலின் நாயகி மருதி...
அந்த பாடல்.


"பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை யாரறிவார்..?

ஆதிமந்தி பாடுவது:

பெண்ணணங்கே போய் வருவாய்- உன் 
பேரன்பை நானறிவேன்..

ஆட்டனத்தி பாடுவது:

அன்புடனே கால்வருடி ஆதரித்தாய் பெண்மணியே
என்றனுயிர் தான் கொடுத்த தெய்வமன்றோ நீ யெனக்கே?

ஆதிமந்தி:

இன்பமெல்லாம் எனக்களித்தாய்- நம்
இருவருள்ளம் ஒன்றலவோ?

இருவரும் இணைந்து..

பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை மறவோமே...!


முடிவில் கண்முன்னே ஒரு நாடகம் அரங்கேறியதை,நம் கற்பனைகள் அரங்கேற்றியதை நிச்சயம் உணரலாம்...



என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...