ஒரு புளிய மரத்தின் கதை..
தலைப்பே விஷ்யத்த சொல்லிருச்சு ..
நம்ம ஊருலலாம் ஒரு சில இடம் இருக்கும். அதை சொல்லி அழைக்கிற அடையாளமே அழிஞ்சு போனாலும்,அதனோட பெயரை அடையாளமா சுமந்து நிக்கும்..அத பத்தின நாவல் தான்..
மனித சௌகரியத்துக்கு ஏற்றாற்போல்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைப்பான் மனிதன்..அதற்காக என்னவெல்லாம் காலம் காலமாக செய்து வந்துக்கொண்டிருக்கிறான் என்பது இந்நாவலை வாசிக்கும் போது, கண்முன் ஓடும்..அதில் அதிகம் அடிவாங்கியது இயற்கைதான் என்பதும் புரியும்..
கதைக்கு வருவோம்..
நிறைய தலைமுறைகள பார்த்த அந்த அலட்டிக்காத புளியமரம்தான் ஹீரோ..
கதை சொல்லியா வர தாமோதர ஆசான் மாதிரி ,நமக்கும் ஒருத்தர், இருக்க மாட்டாங்களானு ஏங்க வைக்கக்கூடிய எதார்த்தமான மனுஷன்..
கதை சொல்லியா வர தாமோதர ஆசான் மாதிரி ,நமக்கும் ஒருத்தர், இருக்க மாட்டாங்களானு ஏங்க வைக்கக்கூடிய எதார்த்தமான மனுஷன்..
எளிமையான நடைல,நாகர்கோவில் வழக்குல சுவாரஸியமா கதைய தெறிக்க விட்ருக்காரு ஆசிரியர் சு.ரா..
புளியமரம்,காத்தாடி தோப்பு,தாமோதர ஆசான்...அந்த செல்லத்தாயி ...மனதோடு பதிந்து விட்டது...
புத்தகத்தில் இருந்து,
1956-57 ஆண்டுகளில்,சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரியவில்லை என்று எண்ணிக்கொள்வேன்...
#thank you chandu for this book
#கண்மணி..💞
No comments:
Post a Comment