Sunday 26 June 2016

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு...

கவிதை தொகுப்பு என்பதை விட ஒரு இயற்கையின் காதலன்😍,குழந்தை பிரியன்💞💟,ஒவ்வொரு கணத்தையும் ரசித்து 👌வாழும் ஒரு கடவுளின் வாழ்க்கைத் தொகுப்புதான் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு💐....

கொக்கின் அலகில் மீனாக ஆழமான அன்புடனும் ஏக்கத்துடனும் அழைத்து 🏃....

சுமதியக்காவின் கூந்தல்-கவிதையாகி போனது அவள் காதலால்💝..

கடவுள்களுக்கும் பசிக்கும்போதும் ,கடவுள்களும் மாமிச பட்சினிகள்தான்....-வேற level ண்ணா👏👏👏👏...

மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்ட மனைவியின் கதறல்😭😭-இதுக்குதானா 8 லட்சம் செஞ்சி கட்டி வந்த...

பத்திரிக்கையாளனின் வலி....

மரங்களின் மேல் கொண்ட காதல்,💖 இயற்கையின் மேல் கொண்ட ஆர்வத்தால் ,அவற்றின் அவல நிலை கண்டு அழுதவை..-தலையணை கண்ணீராக இல்லாமல், சாவு கண்ணீராக கணக்கிறது நெஞ்சில் ...😪😪😪

சமூக அக்கறை கொண்ட புலம்பல்கள்-யாரின் சாபமோ திரவ வடிவில் புட்டியடைத்துக் கிடக்கிறது சாத்தான்...🍻🍷🍹

பெயர் கேட்காமல் போனதால் கடவுள் என்ற பெயர் பெற்ற நெற்றி முத்தமிட்ட சிறுவன்......🍬🍭

தெளிவாக புரிந்தது-எனது கைகளில் இருக்கும் பெண்மை என் அம்மாவும் என் பாட்டியும் என்று....👍👌

அப்பாவின் பொறுப்புகளின் வழி பதிய வைத்த முகம்,பெயர் சொல்லி அழைக்காத அப்பா-அப்பா....📖

சொல் தீவிரவாதிகள் தான் அதிகம் இங்கே....-நாவில் ஆயுதம் ஏந்தியவர்கள்...📌🎶

ஆம் ,கடவுள் சகமனிதனாய் வாழ்ந்துக் கொண்டிதான் இருக்கிறார்கள்.....

சில கவிதைகள் எத்தனை முறை படித்த போதிலும் இன்னொரு முறையென மனது ஏங்க வைக்கும்.-உங்கள் கவிதைகளும்தான்....🎶🎼🎻🎷🎸📓📕📖


ரொம்ப நாள் கழிச்சு படிச்சதும் மட்டும் தான் வருத்தம்.....😭

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...