Friday 17 January 2020

சமந்தா-சக்தி💝

ஓ பேபி..
யெஸ்...நிறைய பேரு பாத்துருப்போம்..

பொதுவா டப்பிங் படம்னாலே கடுப்புதான்...:(
அதும் தெலுங்கு படம் சொல்லவே தேவ இல்ல...

ஆனால்..ஓ பேபி...ரொம்ப அழகான விஷயங்களை தாங்கி நிக்குது..

படம் ஆரம்பிக்கிறப்ப வழக்கமான மாமியார் கொடும கூட இல்ல அது ஒரு வகையான வதை..நாம ஒருத்தங்க மேல உள்ள அக்கறைல அடுத்தவங்கள அதிகமா கோவபடுத்துவோம்..அந்த kind of characterதான் லட்சுமி..
அவங்களுக்கு நடக்கிற மேஜிக்,இளமை திரும்ப கிடைக்கிறது..அது கொஞ்சம் பில்டப்தான்..புள்ளையார கைல குடுத்ததும் இளமை திரும்பிடுமாம்...
ஆனாலும் ,கனவுல நடக்குற விஷயங்களை படமாக்குனா நல்லாதானே இருக்கும்...
(படம் நிஜம்தான்)

சின்ன வயசுலயே காதலிச்சு கைபிடிச்ச கணவர இழந்துட்டு,தன்னோட ஒரே மகனோட வாழ்ற கொடுமையான வாழ்க்கைதான் லட்சுமியோடது...

இளமை திரும்பியாச்சு...
சமந்தாதான் இளமையான லட்சுமி..
உடல்வாகுல மட்டும் இளமை..
எண்ணம்,மனசு லாம் பழைய லட்சுமிதுதான்...

சமந்தா,பின்னி பெடல் எடுத்துருச்சு..அப்டி ஒரு நடிப்பு...
ஒவ்வொரு சீன்லயும் ஸ்கோர் பண்ணுது...

ஆனா சொல்ல வந்தது இதுலாம் இல்ல..
இந்த படத்துல சக்தினு ஒரு கதாபாத்திரம்.
சமந்தாக்கு கல்யாணம் பண்ணிக்கிற முறை...

சமந்தாக்கு, ரத்தம் உடம்புல இருந்து வெளில வந்துட்டா,இளமை மாறி முதுமை வந்துடும்..தன்னோட பேரனோட ஆப்ரேஷனுக்கு ரத்தம் தரனும்னு கட்டாய சூழ்நிலை ல ,சக்தி  சொல்லுவாரு,வேண்டா நீ இளமையோடவே இரு...நீ இழந்த வாழ்க்கைய சந்தோஷமா அனுபவினு...

சமந்தா:என்னடா பேசுற நீ..உனக்கு ஒரு 65 வயசு இருக்குமா...60 வருஷமா என்னத் தவிர வேற நினைப்பே இல்ல உனக்கு..நீ பாத்துக்க மாட்டியா,நா கெழவி ஆகிட்டானு கேப்பா...

யெஸ்...நாம எல்லாருக்கும் நிச்சயமா அப்டி ஒருத்தங்க நம்ம வாழ்க்கைல இருப்பாங்கல..

சக்தி...முறை பையன்கிட்டனே,பொண்ணுங்களுக்கு உள்ள தனி உரிமை,அதிகாரத்த அழகா அந்த சீன்ல நந்தினி சொல்லிருக்காங்க...
உள்ளுக்குள்ள ஒரு நல்ல உணர்வ நிச்சயம் குடுக்கும் அந்த படம்....

நந்தினி(படத்தோட இயக்குனர்) -அந்த பொண்ணு அவ்ளோ அழகா கொண்டு வந்துருக்கு படத்த...

தட் பேரன் ஆல்சோ ச்சோ க்யூட்..அழகன்..

படம் வந்து ரொம்ப நாளாச்சு..இப்ப ஏன் பினாத்துறனு கேக்காதிங்க...பொங்கலுக்கு தான்பா டீவில போட்டாங்க.  பாத்தேன்....

நல்ல படம்ல...சொல்லனும்ல...அதேன்...









No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...