சுழியமாய் சுழன்று கொண்டிருக்கிறது இம்மீள் வாழ்வு...
இம் ஏதுமற்ற மனநிலையை கடக்க ...
உங்கள் ஆறுதல் பேச்சுகளையெல்லம் எதிர்காலத்திற்கு தாங்களே பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
வனாந்திர இரவில்,
இக்குளிரில்
விறகுகளை தீமூட்டி,
இவ்வுடலை கம்பளிக் கொண்டு போர்த்தி
கையில் ஒரு தேனீர் கோப்பையைக் கொடுத்து விட்டு போய் வாருங்கள்..
எனக்கு இவைகளே ஆகச்சிறந்த ஆறுதல்...ம்ம்ம்....ஒரு நாய்க்குட்டியை விட்டு செல்ல மறந்துவிடாதீர்கள்...