கல்லூரிலாம் முடிச்சு...பொம்பல பிள்ளைகளுக்கு ஒரு. ...அஞ்சாறு வருஷத்துக்கு அவிங்க நட்ப சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும்னா...அது நெருங்கிய நட்போட கல்யாணத்துலதான்...
எதோ அந்த புள்ள மேல இருக்க பாசத்துலலாம் போறதில்ல...நம்ம கூடவே சுத்திட்டு அலஞ்ச நாலு நாய்ங்க வருமேனுதான்....
ஆர்பாட்டமில்லாம அடங்காபிடாரித்தனமில்லாம...அடக்க உடக்கமா ஒரு வாழ்க்க போய்ட்டுருக்காப்டி இருக்கும்....(இது எப்ப நடந்துச்சுனு கேட்டா ரத்தம் கக்கி சாவடி மவனே)
இந்த புள்ளைங்கள பாத்ததும்...
பஜாரி தனம்...லம்பாடி பொம்பல..ரவுடி...எல்லாம் வந்து ஒட்டிக்கும்...
இத்தன நாளா சேர்த்து வச்சுருந்த கதையெல்லாம் சொல்லி முடிக்க நேரம் பத்தாம முக்கியமானதமட்டும் முடிச்ச அவித்துவிட்டுட்டு....அடுத்து என் கல்யாணம் வந்துருங்க எல்லாரும்-னு... சொல்லுவா ஒருத்தி...(ஹப்பாடா...next meeting ready)...
Clg-ல படிச்ச எல்லாத்தப்பத்தியும் கிசு கிசு பேசிட்டு..
(அவளுக்கு அவனா....i never expect this...)தூங்காமலே பொழுது விடிஞ்சுறும்....
வாங்க..எல்லாரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்...(நிறைவுக்கட்டம்)...
சாப்பிட்டும் சாப்டாமலையும்...அரக்க பரக்க permission போட்டுட்டு வந்தேனு சொல்லி வேலைக்கு கிளம்பிருவாளுங்க....(நம்ம மட்டுந்தான் வெட்டியா இருக்கமா....
ஹே ஹே.....நம்ம student ஹே)....
மீதமிருக்கும் கதைகளும்ம்......
மிஞ்சியிருக்கும் நாங்களும்...
பீரு. ...-happy married life Beeru...
வாழ்க்கை ஏதோ ஒரு விளிம்பில் நிறுத்தி ,"வாழ்க்கை நீ நினைத்தது போல் எல்லாம் இல்லை" என 'சப்'பென்று அறைந்து விட்டு, மீண்டும்.."வா...வாழ்வை தொடங்கு "என்று தேனீர் கோப்பையை நீட்டும்.மீண்டும் மீண்டு வாழச் செய்யும். அற்பமோ ,அதிசயமோ வாழ்ந்தாக வேண்டும்..இவ்வாழ்வை அன்பின்கண் நகர்த்துவோம்...💝
என் பழைய பனை ஓலைகள்📜💝🐾
என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...
-
ஈருருளி...(சைக்கிள்) (History வகுப்புலாம் இல்ல...அத விக்கிபீடியால பாத்துக்கோங்க... ) சைக்கிள் பெல்... அந்த ஓசை...கிளிங் கிளிங்ன்ன...
-
சந்திரிகையின் கதை... நீண்ட நாட்களுக்கு பின் நிகழ்ந்த ஏகாந்த வாசிப்பு... பெரும்பாலும் பாரதியாரின் புத்தகங்களை வாசிப்பது வழக்கமி...
-
நாம யாரையும் புடிக்காம,எதுவுமே புடிபடாம தனிமைல இருக்கும் போது,நம்ம பக்கத்துலையே உக்கார ஒரு துணை கிடைச்சா....,அவளும் அழகா அழகா கதை சொல்லி சி...