Sunday, 24 December 2017

கொண்டாட மட்டும் அல்ல....

விவசாயிகள் தினம்...
  சில தினங்கள் கொண்டாடவோ,நினைவு கூறவோ,பாதுகாக்கவோ,விழிப்புணர்வு ஏர்படுத்தவோ போன்ற ஏதோவொரு காரணங்களுக்காக அரசாங்கமோ,காலம்காலாமாகவோ ஏற்படுத்தியும் ,ஏற்பட்டும் உள்ளன..
இன்று,அவை அனைத்துமான காரணங்களும் கூடிய நாள்....
‎ஆம்..
‎        விவசாயிகளையும்,விவசாயத்தையும் 'கொண்டாடவும்",
‎         தற்கொலைக்கு ஆளான விவசாயிகளையும்,
‎உணவே மருந்தாக,விவாசாயியே கடவுளாக இருந்த காலம் பற்றி "நினைவு கூறவும்",
‎          அழிந்துக்கொண்டே,நாம் அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் "பாதுகாக்கவும்",
‎            விவசாயத்தை மேம்படுத்த "விழிப்புணர்வு"ஏற்படுத்தவும் தான்..

பல தினங்களில் இதுவும் ஒன்றாக நினைத்துக்கொள்ளாமல், முகப்புத்தகத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றி விட்டதோடு இல்லாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்போம்...

        நாட்டு விதைகளையும்,இயற்கை உரங்களையும் பயன்படுத்தி நலமான விளைச்சலை உருவாக்க அறிவியலை உபயோகிப்போம்..
        ‎
        ‎எருவை உரமாக்கி
        ‎    மண்ணை வளமாக்கி
        ‎          விளைச்சலை பெருக்கி
        ‎                விஷமற்ற உணவை உண்போம்....
        ‎உணவு அமிர்தமாகட்டும்..உடல் உரமாகட்டும்..மனிதம் நிலைக்கட்டும்..
        ‎
        ‎விவசாயம் உயிர் பெறட்டும்...

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...