ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)
ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).
இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)
இப்போ சுவை பார்ப்போம்..
அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…
மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..
நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…
அதாவது,
இனிப்பு – மண்+ நீர்
புளிப்பு- நெருப்பு + மண்
உப்பு – நீர் + நெருப்பு
கசப்பு – ஆகாயம் + காற்று
காரம் – நெருப்பு + காற்று
துவர்ப்பு – நிலம் + காற்று
இந்த அமைப்புலதான் இருக்கு…
ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)
அதுக்கு என்னா பண்ணணும்?…
ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..
இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன
…
இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…
அம்புட்டுதான்…
ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…
இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..
1 comment:
//உணவே மருந்து..மருந்தே உணவு ..//
உண்மை அருமை.
வலிமையிருக்கும்போது உணவை மருந்து போல போல சாப்டா, வயசானபோது மருந்து சாப்பிடும் தேவையிருக்காது.
Post a Comment