அமரர் கல்கி எழுதிய அமர இலக்கியம்தான்...
சாகா இலக்கியம்...யாரையும் சாகடிக்காத,யாரும் சாகாத "கொப்பனாம்பட்டி கொல கேஸ் " -விறுவிறுப்பான கதை...
பொய்மான் என்கிற மாயமானைக் கருவாகக் கொண்டு கதை நகர்கிறது...
வெகுளி,கருமியான நாயகன் செங்கோடன்
தைரியமான அழகு சுந்தரி செம்பளவள்ளி....
வேகமான கதைக்களம்...
விறுவிறுப்பான கதை....
Asusual கதை திருப்பங்கள்...
இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் என்ன நிகழுமென்பதை உணர்த்தும் ஒரு கதை...
ஆண்களின் புனை சுருட்டை கபளீபரமாக காட்டியுள்ளார்...
கொஞ்சல்கள்....-இன்னும் கொஞ்சம் மிகப்படுத்திருக்கலாம்...ஆனால் அந்த சூழ்நிலையில் வாழும் கதாநாயகனுக்கு கணக்கச்சிதம் இவைதான்...
"என் கண்மணியே! என் செல்லக் கிளியே ஆடும் மயிலே பாடும் குயிலே உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா?
"காதலுக்கு கண்ணில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்...அறிவுக்கூடவா இல்லை"-யோசிக்கக்கூடிய ஒன்றுதான்...
சேலம் - நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த பொய்மான் கரடு. சேலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள பொய்மான் கரடு அமைந்துள்ளது...இப்பகுதியில் அமைந்துள்ள கரடின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் கரடின் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால், அந்த மலையை நெருங்க நெருங்க அந்த மான் இருப்பது போன்ற மாயத்தோற்றம் மறைந்து விடும். அதனாலேயே இப்பகுதிக்கு பொய்மான் கரடு என்று பெயரிடப்பட்டது.

1 comment:
அழகான குறுநாவல் யா சிறப்பா இருக்கும்
Post a Comment