Thursday, 15 November 2018

சித்தன்னவாசல் சித்திரம்...💖



"#சித்தன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல......"- வைரமுத்து...

ஷ்ஷ்ஷ்......family trip...கொஞ்சம் அப்டிக்கா இப்டிக்காதான் இருக்கும்...adjust karo baby...( no figures...🙁)

Just ஒரு picnic....

புதுக்கோட்டை...-

உறையூர் நியாபகம்தான் வரும்...முன்னாடி எப்டி இருந்த ஊரு அதலாம்...

திருச்சி-புதுக்கோட்டை..-சித்தன்னவாசல்(அன்னவாசல் போற வழி)

சில குழந்தைங்களாம்..வரவே வராது...ஆன இவ அப்டி இல்ல...அடக்கமா உக்காந்துகிட்டா...(அழகி)...

அங்க பூ....கூடமேல இலைய சுத்தி அதுமேல வச்சுருக்காய்ங்க...

ஹான்...எஸ் எஸ்...புதுக்கோட்டை...

வரலாறுக்கு வாய்க்கரிசி போடாமா இருக்க ஊரு...

திருமயம்-ஊமைத்துரை தஞ்சம் புகுந்த இடம்...
குடுமியான் மலை- சிற்பம்...

சித்தன்னவாசல்-குகைகோவில்..சித்திரம்...

சமணர் படுக்கை...






இப்டி...இன்னும்...

மனசுக்கு நெருக்கமான ஊரும் கூட...

நிறைய நிறைய வரலாற உள்ளடக்கிய இடம்...(எங்க கொஞ்சம் சொல்லேனுலாம் கேக்கக்கூடாது...)

இப்ப புதுப்பிச்சு entrance லாம் கட்டிருக்காங்க....

குகைக்கோவில்னாலே ஆச்சரியம்தான்..(இப்போ அப்போனு மொக்கலாம் போட விரும்பல)..

கண்ணாபின்னானு கலர் குடுத்து abstract artனு சொல்லி பீத்திக்குவோம்...(but that is also nice art...குற்றம் சொல்வதற்கில்லை...கொடி பிடிக்க வேண்டாம்..)..
Ceiling ல..ஒரு குளம்...
தாமைர குளமேதான்...
அன்றில் பறவை...
மூணு மனுசங்க......💙👌
தாமரையோட வளர் பருவம்... ரசிக்கிற மனசு இல்லாதவங்க கூட 5 நிமிசம் நிப்பாங்க...
(பிலிஸ்(blissful)..அதேதான்...🙈)

ஏழடிபட்டம் சமணர் படுக்கை...

துறவிங்களாம்..கருங்கல் வீட்லதேன் வசிப்பாங்களாம்..(அப்பதான்....இங்க காத குடேன்...அந்த ஆசலாம் வராதாம்பா..

ஆஹான் சொல்லிட்டே அடுத்துக்கு வாங்க)

கருங்கல் படுக்கை...

அவங்க அவங்க நீளத்துக்கு ஏத்தா போல...(அவிங்க heightஅ ச்சோன்னேன்..ம்ம்ம்ம்.)

அதுலையும் சங்கு..பிராமி எழுத்து....(முதல inscription வாசிக்க கத்துக்கணும் ..எங்க..தம்பி பொன் கார்த்திக்கேயா...)


சின்ன புள்ளிங்க விளையாட boating...park...இசை நீர்வீழ்ச்சிலாம் இருக்கே...அப்டிக்கா குடுமியான் மலை சிற்பத்தையும் கண்டு களித்துவிட்டு வரலாம்...























Friday, 9 November 2018

மீதமிருக்கும்ம்ம் கதைகள்....

கல்லூரிலாம் முடிச்சு...பொம்பல பிள்ளைகளுக்கு ஒரு. ...அஞ்சாறு வருஷத்துக்கு அவிங்க நட்ப சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும்னா...அது நெருங்கிய நட்போட கல்யாணத்துலதான்...

எதோ அந்த புள்ள மேல இருக்க பாசத்துலலாம் போறதில்ல...நம்ம கூடவே சுத்திட்டு அலஞ்ச நாலு நாய்ங்க வருமேனுதான்....


ஆர்பாட்டமில்லாம அடங்காபிடாரித்தனமில்லாம...அடக்க உடக்கமா ஒரு வாழ்க்க போய்ட்டுருக்காப்டி இருக்கும்....(இது எப்ப நடந்துச்சுனு கேட்டா ரத்தம் கக்கி சாவடி மவனே)

இந்த புள்ளைங்கள பாத்ததும்...

பஜாரி தனம்...லம்பாடி பொம்பல..ரவுடி...எல்லாம் வந்து ஒட்டிக்கும்...

இத்தன நாளா சேர்த்து வச்சுருந்த கதையெல்லாம் சொல்லி முடிக்க நேரம் பத்தாம முக்கியமானதமட்டும் முடிச்ச அவித்துவிட்டுட்டு....அடுத்து என் கல்யாணம் வந்துருங்க எல்லாரும்-னு... சொல்லுவா ஒருத்தி...(ஹப்பாடா...next meeting ready)...

Clg-ல படிச்ச எல்லாத்தப்பத்தியும் கிசு கிசு பேசிட்டு..
(அவளுக்கு அவனா....i never expect this...)தூங்காமலே பொழுது விடிஞ்சுறும்....


வாங்க..எல்லாரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாம்...(நிறைவுக்கட்டம்)...
சாப்பிட்டும் சாப்டாமலையும்...அரக்க பரக்க permission போட்டுட்டு வந்தேனு சொல்லி வேலைக்கு கிளம்பிருவாளுங்க....(நம்ம மட்டுந்தான் வெட்டியா இருக்கமா....

ஹே ஹே.....நம்ம student ஹே)....


மீதமிருக்கும் கதைகளும்ம்......
மிஞ்சியிருக்கும் நாங்களும்...

பீரு. ...-happy married life Beeru...












என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...